×

புரிஞ்சிக்காத ஜென்மம் : கீர்த்தி பஞ்ச்

தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் வரிசையாக ஜோடிபோட்டு வந்த கீர்த்தி சுரேஷுக்கு தற்போது தமிழில் ஒரு படம் கூட கைவசம் இல்லை. அமித்சர்மா இயக்கும் இந்தி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். கோலிவுட்டில் தளதள தக்காளிபோல் பளபளத்த கீர்த்தி தற்போது வாடிப்போன முருங்கைகாய்போல் ஒல்லி தோற்றத்துக்கு மாறிவிட்டார். கீர்த்தியின் புதுதோற்றத்தை ரசிகர்கள் ரசிக்கவில்லை. ஒல்லிபிச்சான் தோற்றத்தைவிட முன்பிருந்த தளதள தக்காளி தோற்றம் தான் நன்றாக இருக்கிறது என பலரும் அவருக்கு மெசேஜ் அனுப்பி வருகின்றனர்.

அதையெல்லாம் கீர்த்தி காதில் வாங்குவதாக தெரியவில்லை. ஸ்ரீதேவிக்கு பிறகு பாலிவுட் சென்று சாதித்த தென்னிந்திய நடிகைகள் யாரும் இல்லை. அந்த சாதனையை நிகழ்த்தவே கீர்த்தி இந்தியில் நடிக்க சென்றிருப்பதாக கூறப்படுகிறது. கீர்த்தியின் லட்சியத்தை பார்த்தால் இனிமேல் அவர் தமிழ் பக்கம் தலைகாட்டமாட்டார் என்றே தெரிகிறது.

ஆனால் யாருடைய குரலையும் கீர்த்தி காதில் வாங்காமல் ஒரு மெசேஜ் பகிர்ந்திருக்கிறார். கீர்த்தி பகிர்ந்திருக்கும் மெசேஜில்,’என்னை படம் எடுக்கும் போட்டோகிராபருக்கு அருமையான போஸில் படங்கள் எடுப்பது எப்படி என நான் பாடம் நடத்த முயல்கிறேன். ஆனால் அவர் அதை புரிந்துகொள்வதாக தெரியவில்லை’ என போட்டோகிராபரை புரிஞ்சிக்காத ஜென்மம் என்று வசைபாடுவதுபோல் பேச்சை திசை திருப்பியிருக்கிறார்.

Tags : Keerthi Punch ,
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!