×

வேட்டைக்காரனாக கரு.பழனியப்பன்

இயக்குனர்கள் அமீர், ராம் ஆகியோரிடம் பணியாற்றிய சந்திரா இயக்குனராக அறிமுகமாகும் படம், கள்ளன். இயக்குனர் கரு.பழனியப்பன் ஹீரோவாக நடித்துள்ளார். படம் குறித்து சந்திரா கூறியதாவது: வெவ்வேறு காலக்கட்ட பின்னணியில் உருவான கதை இது. 1988-89ல் ஒரு கதையும்,  1975ல்  இன்னொரு கதையும் நடக்கும். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கதை பயணிக்கிறது. பரந்து விரிந்த நிலவியலும், காடுகளும் ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.

தேனி அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் ஒருவனுக்கு வேட்டையாடுவதை தவிர, தனது வாழ்வாதாரத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்று  தெரியாது. வேட்டையாடுவதை அரசாங்கம் தடை செய்யும்போது, காலம் அவனுடைய வாழ்க்கையை  எப்படி புரட்டிப்போடுகிறது என்பதை பதிவு செய்துள்ளேன். பாரம்பரிய இசைக்கருவிகளை பயன்படுத்தி கே இசை அமைத்துள்ளார். வேட்டைக்காரனாக கரு.பழனியப்பன். அவருக்கு ஜோடியாக நிகிதா அறிமுகமாகிறார்.

Tags : hunter ,
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...