×

இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் கூறும் சினம் கொள்

ரஞ்சித் ஜோசப் இயக்கியுள்ள படம், சினம் கொள். படம் குறித்து அவர் கூறுகையில், ‘ஐரோப்பா, கனடா, தமிழகம் ஆகிய பகுதிகளில் வாழும் இலங்கை தமிழர்கள் நிதியுதவி செய்தனர். போருக்குப் பிறகு இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து இப்படம் பேசுகிறது.

6 வருடங்கள் சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் நபராக, ஆண்டவன் கட்டளை அரவிந்தன் நடித்துள்ளார். சென்சாரில் எந்த பிரச்னையும் இல்லாமல் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. ஜூலையில் படம் ரிலீசாகிறது’ என்றார்.

Tags : Tamils ,Sri Lanka ,
× RELATED இலங்கை பற்றி வெளியுறவு அமைச்சரும்...