ரஞ்சித் ஜோசப் இயக்கியுள்ள படம், சினம் கொள். படம் குறித்து அவர் கூறுகையில், ‘ஐரோப்பா, கனடா, தமிழகம் ஆகிய பகுதிகளில் வாழும் இலங்கை தமிழர்கள் நிதியுதவி செய்தனர். போருக்குப் பிறகு இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து இப்படம் பேசுகிறது.
6 வருடங்கள் சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் நபராக, ஆண்டவன் கட்டளை அரவிந்தன் நடித்துள்ளார். சென்சாரில் எந்த பிரச்னையும் இல்லாமல் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. ஜூலையில் படம் ரிலீசாகிறது’ என்றார்.