×

பாம்பிடமிருந்து தப்பிய நடிகர்

நடிகர் சிபிராஜ் மிகவும் கவனமாக தனது படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவருக்கு நேர்ந்த ஒரு சம்பவம் வாழ்க்கையே நிலையில்லாதது என்ற உணர்வை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. இதுபற்றி அவர் கூறியது: சில தினங்களுக்கு முன் உடுமலையில் உறவினர் இல்லத்துக்கு சென்றேன். அங்கு வந்த இளைஞர்கள் புகைப்படம் எடுத்தபோது காலுக்கடியில் உஷ் உஷ் என்று சத்தம் கேட்டது. கேமிரா பிளாஷ் ஒளியில் பார்த்தபோது என் கால் அருகே பெரிய பாம்பு தனது இரவு நேர சாப்பாட்டுக்காக தவளையை வேட்டையாட மும்முரமாக இருந்தது. கவனிக்காமல் அதன் அருகே சென்றுவிட்டதால் அதிர்ச்சி யில் ஒரு நொடி ஸ்தம்பித்துப்போனேன். இப்படியொரு காட்சியை நான் எண்ணிக்கூட பார்க்கவில்லை. அப்போதுதான் வாழ்க்கையே நிலையில்லாதது என்ற எண்ணம் என் சிந்தனையில் மின்னலாக தோன்றி மறைந்தது’ என்றார்.

Tags : actor ,
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்...