ஒரு பர்சன்ட்கூட உண்மை இல்லை

ரஜினி நடித்த பேட்ட படத்தை இயக்கினார் கார்த்திக் சுப்புராஜ். மீண்டும் அவரை வைத்து படம் இயக்குவேன் என்றும் தெரிவித்திருந்தார். தற்போது தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில் வெளியான ஒரு கிசுகிசு இயக்குனரை திடுக்கிட வைத்தது. சமீபத்தில் ரஜினியை கார்த்திக் சுப்புராஜ் சந்தித்தபோது தனது இளைய மருமகன் விசாகனை வைத்து படம் இயக்கும்படி கேட்டதாகவும், அதற்கு கார்த்திக் சுப்பு ராஜ் ஓகே சொன்ன தாகவும் தகவல் பரவியது. விசாகனை பொருத்தவரை அவர் தொழில் அதிபராக இருந்தாலும் ஏற்கனவே வஞ்சகர் உலகம் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சினிமாவில் நடிக்கும் எண்ணம் அவருக்கு இருப்பதால் ரஜினி இவ்வாறு தெரிவித்ததாக அந்த கிசுகிசு மேலும் கூறியது. யாரோ கொளுத்திப்போட்ட கிசுகிசுவுக்கு பதில் அளித்த இயக்குனர், ‘இந்த கிசுகிசுவில் 1 சதவீதம் கூட உண்மை கிடையாது. தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குவதற்கான பணியில்தான் தற்போது ஈடுபட்டு வருகிறேன்’ என்றார் கார்த்திக் சுப்புராஜ்.

Related Stories: