போட்டு கொடுத்த அனுமோல்

பாலிவுட் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலிருந்து நடிகர், நடிகைகள் கோலிவுட்டில் நடிக்கின்றனர். பலருக்கு தமிழ் தெரியாது. வசனங்களை ஆங்கிலத்தில் எழுதிவைத்து மனப்பாடம் செய்து பேசுகின்றனர்.. ஆனால் சொந்த மொழிகூட ஒரு நடிகருக்கு தெரியவில்லை என்று புகார் கூறியிருக்கிறார் ஒரு நடிகை. சத்யராஜ் நடித்த ஒரு நாள் இரவில் படத்தில் விபசார பெண்ணாக நடித்தவர் அனுமோல். இவர் மலையைாளத்தில் ரஞ்சித் இயக்கிய ஞான் படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்தார். படப்பிடிப்பின்போது துல்கர் தனது வசனங்களை ஆங்கிலத்தில் எழுதி வைத்து பிறகு பேசி நடித்தார். அவர் இப்படி செய்ததற்கு காரணம் துல்கருக்கு மலையாளம் தெரியாதாம். இந்த ரகசியத்தை சமீபத்தில் போட்டு உடைத்தார் அனுமோல். மம்மூட்டியின் மகனான துல்கருக்கே மலையாளம தெரியாது என்று அனுமோல் கூறுவது வேடிக்கையாக இருப்பதாக ரசிகர்கள் கிண்டல் செய்திருக்கின்றனர்.

Related Stories: