புதையல் குறிப்பு

ஹாலிவுட் படங்களில் வரைபடம் வைத்துக்கொண்டு புதையலை ேதடு வார்கள். கோலிவுட்டில் புதையல் படம் ஒன்று ‘கள்ளத்தனம்’ பெயரில் உருவாகிறது. இதுபற்றி இயக்குனர் சி.தண்டபாணி கூறியது: விவசாய பூமியில் எப்படி பயிரிட வேண்டும் என்று வேளாண்மை படித்த வாலிபர் விவசாயிகளுக்கு சொல்லி தருகிறார். ஆனால் ஊரையே பல வழியில் ஒருவன் கொள்ளையடிக்கிறான். எதிர்பாராவிதமாக வாலிபர் வீட்டில் புதையல் குறிப்புடன் ஒரு ஓலைச்சுவடி கிடைக்கிறது. இதை தெரிந்து கொண்ட வில்லன் ஓலைச்சுவடியை கைப்பற்ற முயல்கிறான். இந்த மோதலில் புதையல் யாருக்கு கிடைக்கிறது என்பதை கமர்ஷியலாக படம் சொல்கிறது. யுகன், வினோ, சொப்னா நிகினா நடிக்கின்றனர். கே.தங்க வேலு தயாரிக்கிறார். எடிசன் எம்.எஸ்.அமர்நாத் ஒளிப்பதிவு. ரவிகிரண் இசை. செங்கம், சாத்தனூரில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

Related Stories: