×

மழையில் நனைந்தபடி முத்தம் தர காத்திருக்கும் ராதிகா ஆப்தே

நடிகை ராதிகா ஆப்தே தமிழ், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்திய படங்களில் சேலைகட்டிக்கொண்டு நடிக்கும் ராதிகா ஆப்தே பாலிவுட், ஹாலிவுட்டில் டாப்லெஸ் காட்சிகளில் நடிக்கிறார். பல்வேறு படங்களில் நடித்திருக்கும் அவருக்கு தீராத ஆசை ஒன்று இருக்கிறதாம். இதுபற்றி அவர் கூறியதாவது: எனக்கு 8 வயதாக இருக்கும்போது என் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த ஒரு பையன் மீது எனக்கு அதிக ஆசை இருந்தது.

அப்போது எனது வீட்டு வேலைக்கார பெண்ணுடன் அடிக்கடி சினிமாவுக்கு செல்வேன். நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். அதில் காதல் காட்சிகளில் மழையில் நனைந்தபடி காதலிக்கு காதலன் முத்தமிடும் காட்சி வரும். அதுபோல் நானும் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் ஆசைப்பட்ட பையனுக்கு மழையில் நனைந்தபடி முத்தம் தர விரும்பினேன்.

ஆனால் அதை அவனிடம் சொல்வதற்கான தைரியம் எனக்கு அப்போது இல்லை. இப்போதுவரை மழையில் யாருக்கும் நான் முத்தம் தந்ததில்லை. அதுதான் எனக்கு நிறைவேறாத ஆசையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தனது  நிறைவேறாத ஆசையை தைரியமாக வெளியிட்டாலும் மழையில் நனைந்தபடி சூடான முத்தம் தர ராதிகா ஆப்தே காத்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அந்த அதிர்ஷ்டசாலி யாரோ என்று கமென்ட் பகிர்ந்து வருகின்றனர்.

Tags : Radhika Apte ,
× RELATED தமிழில் நடிக்க தயார்: சென்னையில் கேத்ரினா கைஃப் பேட்டி