ஸ்ரீதுர்கா சப்த ஸ்லோகீ

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கீழேயுள்ள ஏழு ஸ்லோகங்களும் தேவி மகாத்மியத்தில் உள்ளன. தேவி மகாத்மியத்திலுள்ள எழுநூறு ஸ்லோகங்களின் சாரமே இந்த ஏழு ஸ்லோகங்கள் ஆகும். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் இந்த ஸ்லோகங்களை ஏழுமுறை ஜபிப்பது ஆன்றோர் வழக்கு.

 

* ஓம் ஜ்ஞானினாமபி சேதாம்ஸி தேவீ

பகவதீ ஹி ஸா I

பலாதாக்ருஷ்ய மோஹாய மஹா மாயா

ப்ரயச்சதி II

பொருள்: ஐஸ்வர்யம், தர்மம், புகழ், பொருள், வைராக்கியம், ஞானம் ஆகிய ஆறு குணங்களையும் பூரணமாகப் பெற்ற மஹாமாயா ஸ்வரூபிணியான அந்த தேவி, ஆத்ம ஞானம் பெற்ற ஜூவன் முக்தர்களுடைய மனோ விருத்திகளைக் கூட பலாத்காரமாக இழுத்து மோஹிக்கும்படி செய்கின்றாள்.இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால், `சர்வ ஜன மோஹம்’ ஏற்படுவது அனுபவ சித்தம் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

* துர்கே ஸ்ம்ருதா ஹரிஸி பீதி-மசேஷ

ஜந்தோ:

ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதி-மதீவ சுபாம்

ததாஸி I

தாரித்ர்யது; க பயஹாரிணி கா த்வதன்யா

ஸர்வோபகார-கரணாய ஸதார்த்ர - சித்தா II

பொருள்: ஏ.. துர்கே! ஆபத்திற்குள்ளான ஒருவன் உன்னை தியானித்தால் அவனுக்கு ஏற்படும் பயத்தை நீ அழித்து விடுகின்றாய். நல்லபடியாக வாழ்ந்து வருபவர்கள், உன்னை நினைத்து அன்போடு துதித்தால், அவர்களுக்கு நல்ல அறிவை அளித்து மேன்மேலும் நற்காரியங்களிலே ஈடுபடும்படி செய்கின்றாய். வறுமை, துக்கம், பயம் இவற்றையெல்லாம் அபகரிக்கும் ஏ.. தேவி! உன்னைத் தவிர வேறு யார்தான் எல்லாவிதக் காரியங்களையும் செய்வதற்காக தயாரஸம் ததும்பும் மனத்துடன் கூடியவனாக இருக்கின்றார்? (வேறு ஒருவருமில்லை) இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால், எல்லா துன்பங்களும் நீங்கி, வறுமைப்பிணியும் நீங்கிவிடும்.

* ஸர்வ மங்கள - மாங்கல்யே சிவே

ஸர்வார்த்த-ஸாதிகே I

சரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி

நமோ ஸ்து தே II

பொருள்:
எல்லா மங்களகரமான வஸ்துக்களுக்கும் மங்கள ஸ்வரூபத்தை அளித்தவளும், ஸ்வயம் மங்கள ஸ்வரூபிணியும், எல்லாவற்றையும் ஸாதிக்கக் கூடியவளும், அனைவராலும் ஆச்ரியப்பட தகுந்தவளும், மூன்று கண்களை உடையவளுமான ஏ.. தேவி! நாராயணி!  உனக்கு நமஸ்காரம்.

* சரணாகத - தீனார்த்த - பரித்ராண -

பராயணே I

ஸர்வஸ்யார்தி - ஹரே தேவி நாராயணி

நமோ ஸ்து தே II

பொருள்:
தன்னைச் சரணமாக அடைந்த எளியவர்கள், துன்புற்றவர்கள் இவர்களைக் காப்பாற்றுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டவளும், அனைவருடைய துன்பங்களையும் அபகரிப்பவளுமான ஏ.. தேவி! நாராயணி! உனக்கு நமஸ்காரம். மேலே கண்ட இரண்டு ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால், சகல காரியசித்தியும் பரிபூரணமாக உண்டாகும்.

* ஸர்வஸ்வரூபே ஸர்வேசே ஸர்வசக்தி

- ஸமன்விதே I

பயேப்யஸ் - த்ராஸி நோ தேவி துர்கே தேவி

நமோ ஸ்து தே II

பொருள்: அனைத்து சேதனா சேதன ஸ்வரூபமாய் இருப்பவளாயும், எல்லாவற்றுக்கும் ஈஸ்வரியாயும் ஸமஸ்த சக்திகளுடன் கூடியவளுமான, ஏ.. தேவி துர்கே! எங்களை பலவித பாவங்களிலிருந்து காப்பாற்ற வேண்டும். ஏ..தேவி!  உனக்கு நமஸ்காரம்.

* ரோகான - சேஷான - பஹம்ஸி துஷ்டா

ததாஸி காமான் ஸகலான - பீஷ்டான் I

த்வாமாச்ரிதானாம் ந விபந்நராணாம்

த்வாமாச்ரிதா ஹ்யாச்ரயதாம் ப்யாந்தி II

பொருள்: உனது பிரீதி பிரவாகத்தினால் சமஸ்த ரோகங்களையும் அழித்துவிடுகின்றாய்! கோபமுண்டானாலோ அவரவர்களுக்கு பிரியமான எல்லாப் பொருள்களையும் அழித்து விடுகின்றாய்! உன்னை அண்டிய மனிதர்களுக்கு ஆபத்து என்பதே உண்டாவதில்லை. உன்னை அண்டியவர்கள், மற்றவர்களால் விரும்பதக்கவர்களாகவும் ஆகிவிடுகின்றனர். இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால், எல்லா வித்யாபிராப்திகளும் உண்டாகும்.

* ஸர்வா - பாதா - ப்ரசமனம் த்ரைலோக்

யஸ்யாகிலேச்வரி I

ஏவமேவ த்வயா கார்ய-மஸ்மத்-வைரி-

விநாசனம் II

பொருள்: எல்லாவற்றுக்கும் ஈஸ்வரியான, ஏ.. தேவி இவ்விதமே மூவுலகங்களுடைய எல்லா விதமான துன்பங்களையும் நிவர்த்தி செய்தல், எங்கள் விரோதிகளை அழித்தல் இவை எப்பொழுதும் உன்னால் செய்யப்பட வேண்டும்.

இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால், எல்லா துன்பங்களும் நீங்கிவிடும். இதி ஸ்ரீதுர்காஸப்தஸ்லோகீ சம்பூர்ணம்.

தொகுப்பு: அருள் ஜோதி

Related Stories: