தன் கணவரையும், குழந்தைகளையும் அன்புடன் பராமரித்து, கவனித்துக் கொள்வதே மனைவிக்கு ஏற்பட்ட தர்மம் ஆகும்! இதைத் தவிர, வேறு உயர்ந்த தர்மம் பெண்களுக்கு கிடையாது. அத்தகைய உத்தம பெண்களுக்கு, வாழ்க்கை முடிந்ததும், தர்மராஜரே வரவேற்று, உபசரித்து சுவர்ணமயமான (தங்கம்) விமானத்தில் சுவர்க்கம் எனும் உயர்ந்த உலகிற்கு தக்க மரியாதைகளுடன் அனுப்பிவைக்கிறார்.