தீபம் ஏற்றுதல் என்பது இறைவன் வழிபாட்டில் நமக்கு முக்கியமான பங்கு வகிக்கிறது. காலையிலும் மாலையிலும் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் என்று
நம் முன்னோர்கள் கூறுவார்கள். அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கிளியன் சட்டி என பல வடிவங்களில் தீபம் ஏற்றலாம்.
தீபம் ஏன் நாம் ஏற்ற வேண்டும்?
தீபம் ஏற்றும் முறைகள் என்ன என்பதை நாம் தெரிந்துகொள்வோம் அதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை நாம் காண்போம்? இறைவன் உலகில் பஞ்ச பூதங்களாக நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் வடிவில் நிறைந்திருக்கிறார். இவற்றுள் நெருப்பு என்னும் ஒளி வடிவமே அகம் மற்றும் புறம் இருளாகிய அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை தரக் கூடியது.ஞானத்தை வழங்கும் இறைவனை விளக்கு என்னும் வடிவமான தீபத்தினை ஏற்றி நாம் வழிபாடு செய்வது மிக சிறந்தது ஆகும். இதனையே புராணங்களும் இதிகாசங்களும் கூறுகின்றன.தீபத்தின் ஒளியில் கலைமகளான சரஸ்வதி தேவியும், சுடரில் திருமகளான இலட்சுமியும், வெப்பத்தில் மலைமகளாகிய உமையம்மையும் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவேதான் ஆலயங்களில் கோடி தீபம், லட்ச தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன.ஒளிரும் இடங்கள்தீபமானது வீட்டில் பூஜை அறை, சமையலறை, துளசி மாடம், முற்றம் போன்ற இடங்களிலும், ஆலயங்கள், தொழில் நிறுவனங்கள், கல்விக்கூடங்கள் என எல்லா இடங்களிலும் ஏற்றப்படுகிறது. பாரத பூமி கலாச்சாரத்தில் நம் எல்லா செயல்களின் தொடக்கத்தில் தீபம் ஏற்றப்பட்டே செயல்கள் ஆரம்பிக்கப்படுகின்றன.ஏற்றும் நேரங்கள்வீடுகளில் தீபத்தை காலையில் பிரம்ம முகூர்த்தம் என சொல்லப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலும், மாலையில் பிரதோஷ நேரம் என்று சொல்லப்படும் 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது சிறந்த பலனை கொடுக்கும்.ஆலயங்களில் எந்த நேரத்திலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம். வழிமுறைகள்தீபம் ஏற்ற முதலில் விளக்கினை நன்கு சுத்தம் செய்து அல்லது புதுவிளக்கையோ பயன்படுத்தலாம்.விளக்கிற்கு மஞ்சள் குங்குமம் இட்டு பூவினால் அலங்காரம் செய்ய வேண்டும். அகல் விளக்கு என்றால் மஞ்சள் குங்குமம் இட்டு பூவினை விளக்கினைச் சுற்றி வைக்கவும்.நெய் அல்லது எண்ணெயை விளக்கில் ஊற்றும்போது நிறைய ஊற்ற வேண்டும். அதன் பின் திரி இடவேண்டும்.நெய் அல்லது எண்ணெய் விளக்கில் எத்தனை திரிகள் நாம் போடுகிறோமோ அத்தனையையும் ஏற்றிவிட வேண்டும்.இரண்டு திரிகளை ஒன்றாகச் சேர்த்து முறுக்கி திரி இடவேண்டும். இவ்வாறு செய்வது வீட்டில் கணவன், மனைவி ஒற்றுமையைக் குறிப்பதாக நம் முன்னோர்கள் கூறுகிறார்கள்.திரியை நன்கு நெய்யிலோ, எண்ணெயிலோ நனைத்து பின் நுனியை கூராக்கி தீபம் ஏற்ற வேண்டும்.ஏற்றும் திசைகள், அதன் பலன்கள் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் வாழ்வின் துன்பங்கள் விலகும். கிரக தோஷம் நீங்கி லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பூமி இல்லாதவர்களுக்கு பூமியோகம் கிடைக்கும்.தென்கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் குழந்தைகளுக்கு அறிவுக் கூர்மை உண்டாகும். குழந்தைகள் படிப்பில் சிறப்பாக விளங்குவர். தென்கிழக்குத் திசையில் தீபம் ஏற்றி அதன் புகையை குழந்தைக்கு நெற்றியில் இடவேண்டும்.தெற்குத் திசை நோக்கி தீபம் ஏற்றக் கூடாது. மரண பயம் உண்டாக்கும். தென்மேற்கு:திசையில் தீபம் ஏற்றினால் துன்பம், கலகம் ஆகியன நீங்கும். திருமணத் தடைகள் நீங்கும்.மேற்கு:திசையில் தீபம் ஏற்றினால் பணத்தால் வரும் பகைமை வளராமல் தீரும். கடன் தொல்லை விலகும்.வடமேற்குத் திசை நோக்கி தீபம் ஏற்றினால் சகோதர சகோதரி ஒற்றுமை கூடும். குடும்பச் சண்டைகள் விலகும்.வடக்கு:திசை நோக்கி தீபம் ஏற்றினால் நல்ல காரியங்களில் வெற்றி பெறும். திருமணம் கைகூடும்.வடகிழக்கு:திசை நோக்கி தீபம் ஏற்றினால் வீட்டின் தலைவர் வாழ்வில் வள்ளலாக மாறுவார். அவரும் அவர்தம் பிள்ளைகளும் தம்மையும் அறியாமல் தர்மம் செய்வர்.ஒருமுகம் ஏற்றினால் நினைத்த செயல்கள் நடக்கும்.இரண்டு முகங்கள் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை கூடும். மூன்று முகங்கள் ஏற்றினால் புத்திர தோசம் விலகும்.நான்கு முகங்கள் ஏற்றினால் பசு, பூமி, செல்வம் ஆகியவை கிடைக்கும். சர்வ பீடை நீங்கும்.ஐந்து முகங்கள் ஏற்றினால் சகல நன்மையும் அஷ்ட ஐஸ்வரியமும் கிடைக்கும்.நெய்யினால் தீபம் ஏற்றினால் சகல விதமான செல்வங்கள் பெருகும்.நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும். நம்மை விட்டு எல்லா பீடைகளும் விலகும் .எல்லாவிதமான தெய்வ வழிபாடுகளுக்கும் நல்லெண்ணெய் சிறந்தது.தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்ற வசீகரம் கிடைக்கும்.இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்ற சகல காரியங்களிலும் வெற்றி தரும்.வேப்ப எண்ணெய் தீபம் ஏற்றினால் கணவன் மனைவி உறவு நலம் பெறும்.வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் மூன்றையும் சேர்த்து தீபம் ஏற்றினால் மனதில் தெளிவும், உறுதியும் ஏற்படும். மேலும் இது குலதெய்வ வழிபாட்டிற்கு சிறந்தது.நெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் என ஐந்து கூட்டு எண்ணெய் கலந்து தீபம் ஏற்றினால் அம்மன் அருள் பெறலாம்.கடலை எண்ணெய், பாமாயில், கடுகு எண்ணெய், காய்ச்சிய எண்ணெய், அசுத்தமான எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு தீபம் ஏற்றக்கூடாது. விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும் திருமகளுக்கு பசு நெய் கொண்டு தீபம் ஏற்றி வழிபட சகல செல்வங்களும் கிடைக்கும்.குலதெய்வத்திற்கு வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் மூன்றையும் சேர்த்து தீபம் ஏற்றி வழிபட்டால் குலதெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும்.அம்மனுக்கு நெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் என ஐந்து கூட்டு எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி வழிபட்டால் அம்மனின் அருள் கிடைக்கும்.சிவன், முருகன், திருமால் உள்ளிட்ட ஏனைய தெய்வங்களுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறந்தது.திரியின் பலன்கள்தாமரைத் தண்டுத் திரி: தாமரை மலரின் தண்டுப் பகுதியை வெயிலில் காய வைத்து அதிலிருந்து திரியினைத் தயார் செய்து தீபம் எற்றினால் முன்வினைப் பாவங்கள் நீங்கி. நிலையான செல்வம் வரும்.பருத்திப் பஞ்சு திரி: பொதுவாக பருத்திப்பஞ்சுதிரி கொண்டே தீபங்கள் ஏற்றப்படுகின்றது. இத்திரியினைப் பயன்படுத்தி விளக்கிட குடும்பம் மகிழ்ச்சியாகவும்,. நற்செயல்களும் நடக்கும்.வாழைத்தண்டு நார் திரி: வாழைத்தண்டினை காயவைத்து அடித்து பஞ்சு போலாக்கி திரி தயார் செய்து தீபம் ஏற்ற வேண்டும். முன்னோர் சாபம், தெய்வக் குற்றங்கள் ஆகியவை நீங்கி நலமான வாழ்வு கிடைக்கும். மேலும் இது குடும்ப அமைதி, மனசாந்தி, குழந்தைப்பேறு ஆகியவற்றை தரும்.வெள்ளெருக்கம் பட்டைத் திரி: வெள்ளெருக்கம் பட்டையை ஊற வைத்து காய வைத்து அடித்து நாராக்கி திரியாகத் திரித்து தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வம் வளரும். புதிய வெள்ளைத் துணி திரி: புதிய வெள்ளை நிற துணியை பன்னீரில் நனைத்து காயவைத்து திரியாக்கி தீபம் ஏற்றி வழிபட அனைத்து நல்ல பலன்களும் கிடைக்கும்.விளக்குகளும் அதன் பலன்களும்மண்ணால் செய்யப்பட்ட விளக்கில் தீபம் ஏற்றினால் பீடைகள் நீங்கும்.வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றினால் திருமகள் அருள் வளரும்.வெண்கல விளக்கில் தீபம் ஏற்ற ஆரோக்கியம் கிடைக்கும்.இரும்பு விளக்கில் தீபம் ஏற்ற சனி கிரக தோசம் போகும்.பஞ்ச உலோக விளக்கில் தீபம் ஏற்ற தேவதை வசியம் உருவாகும்.சுத்தம் செய்யும் முறை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் விளக்கினை சுத்தம் செய்ய வேண்டும்.தீபம் ஏற்றும் விளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரை குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி தனயட்சணி குடியிருக்கிறாள். வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி சங்கநிதியட்சணி குடியிருக்கிறாள். எனவே தான் செவ்வாய், புதன், வெள்ளிக்கிழமைகளில் விளக்கை சுத்தம் செய்யக் கூடாது.ஞாயிறு அன்று சுத்தம் செய்தால் கண் நோய் நீங்கும்.திங்கள், வியாழன் அன்று சுத்தம் செய்தால் மனஅமைதி ஏற்படும்.சனி அன்று சுத்தம் செய்தால் வீட்டிலும் பயணத்திலும் தொலைந்து போன பொருள் திரும்பக் கிடைக்கும்.ஏற்றும் முறைதீபம் ஏற்றியவுடன் தீபத்தில் முப்பெரும் தேவியர் வந்துவிடுவர். ஆகையால் தீபத்தின் திரியினை தூண்டிவிட்டு பிரகாசமாக்கலாம். திரியின் கசடினை தட்டி விடக்கூடாது.தீபத்தினை தானாக அணைய விடக்கூடாது. தீபத்தினை அணைய வைக்கும் போது வாயால் ஊதவோ, கைகளால் விசிறவோ கூடாது. பூக்களால் அல்லது கல்கண்டினால் தீபத்தின் சுடரினை அணைய வைக்கலாம். சிறு குச்சியைக் கொண்டு திரியை விளக்கினுள் நுழைத்து எண்ணெயில் அமிழ்த்தி அணைய வைக்கலாம்.- அருள் பெருகும்குடந்தை நடேசன்