×

திதியும் அதன் துதிகளும்

பொதுவாகவே நம்மில் பலருக்கு நட்சத்திரங் களை பற்றி  மந்திர வழிபாடு  உண்டு  என்று தெரியும். திதி தேவதைகளுக்கும் வழிபாடு உண்டு என்று நம்மில் பலபேருக்கு தெரியாது. சென்ற இதழிலில் வெளியான மங்களம் தருவாள் ஸர்வமங்களா என்ற கட்டுரையில் தில்லை கங்கா நகர் ராஜராஜேஸ்வரி அம்பாளை தரிசனம் செய்வதற்கு 16 படி ஏறி சுக்ல மற்றும் கிருஷ்ண பட்சமாக திதிகளை தியானம் செய்து அகஸ்திய முனிவரின் சோடச மாலை பாடலை படித்து வணங்க வேண்டும் என்று சொன்னோம். இந்த ஆலயத்தில் மட்டும்தான் திதி தேவதை
களின் பாடல்களை நாம் காண முடியும். ஆன்மிக பலன் வாசகர்களுக்காக  அந்த  பாடல்களை  கீழே தொகுத்து வழங்கியுள்ளோம் .

அகஸ்திய முனிவரின் சோடச மாலை
பூர்வ பக்ஷம் - சுக்லபக்ஷம்
(ஏறும்பொழுது) வளர்பிறை

அமாவாசை - ஸ்ரீத்வாரதேவதா தேவி
அம்மாவசி தானான அரூபித் தாயே
அகண்டபரிபூரணியே யமலை சக்தி
நம்மாலே பாடரிது நினதுபேரை
நாவிலே வந்தருள்செய் நாயே னுக்குத்
தம்மாலே சோடசதோத் திரம் விளங்கத்
தயவுசெய்து நின்பதத்தில் தரிப்பாய் தேவி
சும்மாநீ இருக்காதே கண்பார்த் தாள்வாய்
சோதியே மனோன்மணியே சுழினை வாழ்வே !

பிரதமை - ஸ்ரீ காமமேஸ்வரிதேவி
பிரதமையில் பிரவிடையாய்க்    
கலைவே றாகிப்
பின்கலைவிட் டிடகலையில் பிறந்த     
                கன்னி
உறவாகி ரவியைவிட் டகலாத நின்ற
உமையவளே என்பிறவி ஒழியச்     
                  செய்வாய்
இறவாத வரத்துடனே ஏமம் வாமம்
எட்டெட்டுஞ் சிந்திக்க எனக்குத் தந்து
சுருதியிலே வந்தருள்செய் அடியே னுக்குச்
சோதியே மனோன்மணியே சுழினை வாழ்வே!
துவிதியை - ஸ்ரீ பகமாலினிதேவி
துரிகையென்றும் உபயமென்றும்     
இடைபின் என்றுஞ்

சுவர்க்கமென்றும் நரகமென்றுஞ்     
சொல்லக் கேட்டு
மதிரவியா யடிமுடியாய் உயராண்     
பெண்ணாய்
வாழ்வாகித்தாழ்வாகி வழுங்குந் தாயே
விதிதொலைந்து வினைதொலைந்து
வெட்கங் கெட்டு
வீம்புயம் ஆசை துக்கம் விட்டே யோட்டு

சுதன் முகம்பார் மதிமுகத்தால் சூடசா
சூட்சி
சோதியே மனோன்மணியே சுழினை
வாழ்வே!
த்ரிதியை - ஸ்ரீ நித்யக்லின்னாதேவி
திரிதிகையில் அசுத்தமற்றுச் சுத்தமாகிச்
சிற்சொரூபத் தனைச் சேர்ந்த தெளிவே
கண்டு
உறுதியுடன் உனதுபதம் அகலாச்
சிந்தை

உறவு செய்வாய் உம்பரையே உமையே
தாயே
அறுதியாய்இகத்தாசை அகன்ற ஞான
ஆனந்த வாசையைத்தா அடியேனுக்குச்
சுருதியிலே மனமிருகக்கத் துணைசெய்
தாயே
சோதியே மனோன்மணியே சுழினை
வாழ்வே!

சதுர்த்தி - ஸ்ரீ பேருண்டாதேவி
சதுர்த்தியிலே நாதவிடைவாம பூசை
தரவேணுந் தயவாக அடிமை செய்ய
மதித்தபடி வரமருள்வாய் வாம ரூபி
வான் வெளியே வாசியே மௌனத்
தாயே

பதித்துன்றன் பதத்திலென்றன் சென்னி
தன்னைப்
பரிதிமதிஅகன்றாலும் அகலா மற்றான்
துதித்தபடி நின்சரண மெனக்குத்
தந்தாள்
சோதியே மனோன்மணியே சுழினை     
வாழ்வே!
பஞ்சமி- ஸ்ரீ வன்ஹிவாசினிதேவி
பஞ்சமியில் பெற்றெடுத்தாய்
சேயேன் றன்னைப்

பால்கொடுத்துப் பதநடனஞ் செய்தாய்
தாயே
கொஞ்சமொரு காரியத்தில் தவக்கஞ்
செய்தால்
குழிப்பயிருங் கூரையின்மேல் ஏறுமோ
தான்
தஞ்சமென நின்பொற்றாள் சார்த்த
மைந்தன்
சாக்கிரத்துக் கப்பால்நின் றாறி ணைக்குள்
துஞ்சியுந்துஞ் சாதிருக்க ஏணி தந்தாள்

சோதியே மனோன்மணியே சுழினை
வாழ்வே!
சஷ்டி- ஸ்ரீ மஹாவஜ்ரேஸ்வரி தேவி
சஷ்டியெனுஞ் சடாக்கரத்துள்
     சதாசி வத்துள்
சைதன்ய போதத்துள் தானே தானாய்
அஷ்டதிக்கின் அன்பர்களும் பெரியோர்
வானோர்
அயனரியும் அரன்முதலோர்
     அர்ச்சித்தார்கள்
கிட்டுமோ வுனைத்துதிக்க புலைநா
யேற்குக்
கிடைத்ததுதான் உன்னுடைய
கிருபையாலே
சுட்டியுடன் ரவிமதியுங் கலந்து மின்னுஞ்
சோதியே மனோன்மணியே சுழினை
வாழ்வே!
சப்தமி- ஸ்ரீ சிவதூதிதேவி
சப்தமியாஞ் சபையினுள்ளே கடலேழ்
சூழ

சப்தரிஷி சப்தகன்னி தணிந்து போற்ற
அத்தரிட பாகமதில் முக்கோ ணத்துள்
அமர்ந்திருந்த பேரின்ப ஆதித் தாயே
இத்தனைநாள் படுந்துயரங்காணா
     தார்போல்
இருந்துவிட்டால் யார் தீர்ப்பார் எனை
நீ கண்பார்
சுத்தமதி ரவிகலந்து வொளியாய்
மின்னுஞ்

சோதியே மனோன்மணியே சுழினை
வாழ்வே!
அஷ்டமி- ஸ்ரீ த்வரிதாதேவி
அஷ்டமியாம் அஷ்டகலை அஷ்டநாகம்
அஷ்டகிரி அஷ்டகெஜம் அஷ்ட பாலர்
இஷ்டமுடன்அஷ்டதுர்க்கி அஷ்ட
கும்பம்

ஏற்றமாம்அஷ்டவயி ரவரு மானாய்
திட்டமுடன்மெய்யன்பர் பெரியோர்
வானோர்
செல்வியே அஷ்டசித்தி
தெவிட்டாத் தேனே
துஷ்டருக்கும் இஷ்டருக்குத் தாயாய்
நின்ற
சோதியே மனோன்மணியே சுழினை
வாழ்வே!
நவமி- ஸ்ரீ குலசுந்தரிதேவி
நவமியெனும் நவரத்ன கிரீடஞ் சூட்டி
நவகோடி நாதருனைப் பணிந்து போற்ற
தவம் பெருகும் ஒரு நான்குக்
கப்பாலீர்த்துத்

தற்சாத்தாய் பிள்ளைகளைத் தயவு
வைத்துச்
சிவபதமுஞ் சிவவெளியுத்
     தெரிசித் தார்கள்.
சிவகாமி நின்னுடைய செயலினாலே
சுதனெனக்கும் அப்படியே அருள்செய்
தாயே
சோதியே மனோன்மணியே சுழினை
வாழ்வே!
தசமி- ஸ்ரீ நித்யாதேவி

தசமியெனுஞ் சாக்கிரத்துக் கப்பா லேறிச்
சிலம்பொலியும்
நினதுதிருத் தாளுங்கண்டு
நிசமான தூலசூக் குமத்தோ டொன்றி
நிஷ்களத்தில் உன்னுடன் நான்
ஒன்றேயாகி

அசையாத ஆனந்த மயமாய் நிற்க
அருள் புரியாய் வரமருளா னந்த ரூபி
சுசிகாமாய்ப் பிள்ளைமுகம் பார்த்தாட்
கொள்வாய்
சோதியே மனோன்மணியே சுழினை
வாழ்வே!

ஏகாதசி- ஸ்ரீ நீலபதாகாதேவி
ஏகாதசி ஆனமிவர் தந்த னக்குள்
இருக்குமுனை யடையமயிர்ப் பால
மீதில்

சாகாத கால்வழியே ஏறி நின்று
தப்பாமல் பிடித்தபின்பு எங்கே போவாய்
வேகாத தலையை விட்டு வெளியில்
செல்ல
வேறுகதி உனையல்லால் எனக்கிங்
குண்டோ

தோகாயென் னுள்ளிருந்து சுதனைக்
காப்பாய்
சோதியே மனோன்மணியே சுழினை
வாழ்வே!

துவாதசி - ஸ்ரீ விஜயாதேவி
துவாதசி யானவிரு மாவும் ஒத்துச்
சுணைகடந்து அணைகடந்து துவாத
சாந்தம்

துவாதசி யொடுங்கிநின்ற மூல ஞானம்
சுருதிமுடி விடமெனக்குச்சொல்லு
மம்மா

துவாதசியால் கேசரத்து ளாடி நின்ற
சுந்தரநற் சௌந்தரியே சொரூபத்தாயே
துவாதசி யான பன்னிரண்டு மொன்றாஞ்
சோதியே மனோன்மணியே சுழினை
வாழ்வே!

திரயோதசி - ஸ்ரீ ஸ்ரவமங்களாதேவி
திரயோதசி யானதொரு இடையின்
மையம்
சேர்ந்தாறா தாரமதில் வேரு மூன்றி
குறியாகும்ஆக்கினையைக் கடந்து மேவி
குருவாகிக் குருபதத்தில் குறிக்கும்
அம்மை

அறிவை அறி வாலறிந்தே அநுபவத்திவ்
வறிவொடுங்கும்பாகமதைஅருளிச்
செய்வாய்
துறவுதனை மனமடையத் துணைசெய் தாயே
சோதியே மனோன்மணியே சுழினை
வாழ்வே!

சதுர்த்தசி- ஸ்ரீ ஜ்வாலாமாலினிதேவி
சதுர்த்தசி யானபதினான்காய் நின்ற
தற்பரத்தி சிற்பரத்தி தாயும் நீயே
குதித்தோடிப் போகாமல் எட்டில்
ேசர்ந்து

கும்பகமாய்த் தம்பணத்துள் கூட்டி யாடி
விதியான பிரமலபி வளர வென்றும்
விளங்குவுமே செய்வதுதான் விந்தை
தாயே

துதிக்கறியாப் பாலனெனைக் காத்தல்
வேண்டும்.
சோதியே மனோன்மணியே சுழினை
வாழ்வே!
பௌர்ணமி- ஸ்ரீ சித்ராதேவி
பௌரணையாய்க் கலைகள்

பதி னாறுமாகிப்
பார்நிறைந்து மதிவதனப் பால ரூபி
சவரணையாய் உலகனைத்துந் தாங்குஞ்
சக்தி

தற்பரத்தி சிற்பரத்தி சராச ரத்தி
நவரத்ந பீடத்தில் நிறைந்து நின்ற
நாற்பத்துமுக்கோண நவர சக்தி
சுவரனையாய் கனகசபை தன்னில்

வாழும் சோதியே மனோன்மணியே சுழினை
வாழ்வே!

ஆலயத்திற்கு வரமுடியாத அன்பர்கள் இல்லத்திலிருந்தே திதி தேவதைகளை மனத்தில் தியானம் செய்து அம்பாளின் அருளை பெறலாம். அடுத்த இதழில் அமர பட்சம் - கிருஷ்ண பட்சம்  இறங்கும் பொழுது  தேய்பிறை  பாடல்களை பார்ப்போம். இவ் ஆலயத்தில் வசந்த நவராத்திரி 12.4.2021 முதல் 24.4.2021 வரை சிறப்பாக நடைபெறுகிறது. நவாராண பூஜை, ஹோமம், மஹா சண்டிஹோமம், புஷ்ய யாகம் போன்றவை இந்த நிகழ்ச்சியில் நடைபெறும்...

குடந்தை நடேசன்

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?