×

பலன் தரும் ஸ்லோகம் (மன அமைதி பெற)

புஜே ஸவ்யேவேணும் சிரஸி சி கிபிச்சம் கடிதடே
துகூலம் நேத்ராந்தே ஸஹசரகடாக்ஷம் விதததே
ஸதா ஸ்ரீமத்ப்ருந்தாவனவஸதி-லீலாபரிசயோ
ஜகந்நாத: ஸ்வாமீ நயனபதகாமீ பவது மே
- ஸ்ரீஜகந்நாத பிரார்த்தனா


பொதுப் பொருள்: வலது கரத்தில் புல்லாங்குழலை ஏந்தியவரும், மயில் இறகை கிரீடத்தில் அலங்கரித்தவரும், பீதாம்பரத்தை இடுப்பில் அணிந்தவரும், தன்னை துதிக்கும் பக்தர்களை தன் கடைக்கண்களால் அருளுபவரும், துளசி செடிகளால் நிறைந்த வனத்தில் எப்பொழுதும் வசிப்பவரும், தன் லீலைகளால் இந்த உலகிற்கு அறிமுகமானவரும், அனைத்து உலகிற்கும் தலைவனுமான ஸ்ரீஜகந்நாத ஸ்வாமியை என் கண்கள் காணும் அனைத்து பொருளாய் விளங்குமாறு வேண்டுகிறேன்.

(இத்துதியை கிருஷ்ண ஜெயந்தியன்று
துதித்தால் மன அமைதி பெறலாம்)

Tags :
× RELATED சுந்தர வேடம்