உலகெலாம் படைத்த மூத்தோன் வாழ்க
உயிரெலாம் வணங்கும் அருளோன் வாழ்க
பொன்னிறம் ஒளிர உதித்தாய் வாழ்கதன்னலமிலா தலைவன் வாழ்க!
நெற்றிப்பொட்டாய் தகிப்பவன் வாழ்கஒற்றைக்கால் தேரில் வருபவன் வாழ்கமுற்றிய நோயை நீக்குவான் வாழ்கவெற்றிக்கு துணைவன் ஆதவன் வாழ்க!மதிஒளி வழங்கும் ஆசான் வாழ்கமனவொளி பரப்பும் சுடரே வாழ்கஅதிதியின் அழகுப்புதல்வன் வாழ்கஅகண்ட தீப செங்கதிர் வாழ்க!காரிருள் விலக்கும் கதிரவன் வாழ்ககர்ணன் போற்றும் தந்தையே வாழ்ககருணையே, காந்தமே, சாந்தமே வாழ்ககாலத்தின் சாட்சியாய் நிலைப்பவன் வாழ்க!தூயமணி மாலை போன்றுகதிர் கரம் சேர்ப்பாய் வாழ்கதாய்முகம் கண்டு மலரும்தாமரை மலர்கள் வாழ்க!காலையில் தளிர்முகம் காட்டிகடும்பகல் விழித்தீ மூட்டிமாலையில் பொன்னாய் உருகிவிண்ணில் கலக்கும் சூரியன் வாழ்க!தூயவர் நல்லிதயம் மகிழதுலங்கிடும் ஒளியே வாழ்கதுஞ்சாத கண்கள் காட்டிஅஞ்சாது அறம்காப்பாய் வாழ்க!நிலைக்கின்ற செல்வம் தழைக்ககொடுக்க குறையாத அட்சயபாத்திரம் வாழ்கமறைக்கின்ற பகைமை வீழ்த்திமலைக்கின்ற வாழ்வருளும் தேவா வாழ்க!வாய்மையின் உருவே வாழ்கவற்றாத நிதியம் வாழ்கவள்ளல் கரங்கள் வாழ்கவணங்கினார் உயர்ந்தார் வாழ்க!தீமைகள் எரித்து அழித்துநன்மைகள் வளர்ப்பாய் வாழ்கநானிலத்தில் தர்மம் சூழ்ந்துநற்குடி தழைக்க வாழ்த்துவோம் வாழ்க!பொங்கல் பால்வளம் பொங்கிவீட்டில் மகிழ்ச்சி செல்வம் தங்கட்டும்!நாட்டில் அன்பும், அமைதியும் நிலவட்டும்!ஏட்டில் எழுதாத சுவையும்வாழ்வில் கூடட்டும்!காட்டில் விளைந்த கரும்பின்தத்துவம் உணரட்டும்!உலக ஒளிவிளக்கு சூரியனால்உயிர்கள் வாழட்டும்!பசுமை பயிர்கள் செழித்துபகுத்துண்ணும் தர்மம் பரவட்டும்!- விஷ்ணுதாசன்