பலன் தரும் ஸ்லோகம்(மழலை வேண்டுவோர் ஜபிக்க வேண்டிய ஸ்ரீ கிருஷ்ணர் துதி)

லம்பாலகம் லம்பிதஹார யஷ்டிம்

ஸ்ருங்கார லீலாங்கித தந்தபங்க்திம்

பிம்பாதரம் சாருவிஸால நேத்ரம்

பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

- பால முகுந்தாஷ்டகம்

பொதுப் பொருள்: தலையின் முன் புறத்தில் தொங்குகின்ற கேசங்களை உடையவரும், மார்பு வரை தொங்கும் நீண்ட ஹாரத்தை அணிந்தவரும், ஸ்ருங்கார ரஸத்துடன் கூடிய பற்களின் வரிசைகளை உடையவரும் கோவைப்பழம் போன்ற அழகிய உதட்டை உடையவரும் அழகியதும் நீண்டதுமான கண்களை உடையவருமான பாலமுகுந்தனை மனதால் வணங்குகிறேன். கோகுலாஷ்டமியன்று இத்துதியால் கிருஷ்ணனை வணங்கினால் கிருஷ்ணரின் திருவருள் கிட்டும். ஆண் குழந்தை வேண்டுவோர்க்கு ஆண் குழந்தை பிறக்கும்.

Related Stories: