×

ஈகை திருநாள் சிறப்புக்கள்

புனித ரமலான் மாதம் தொடங்கி, இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர். இந்நிலையில் உலகம் முழுவதும் ரம்ஜான் மே 25ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான். இது இஸ்லாமிய நாள்காட்டியில் 9வது மாதமாகும். இந்த மாதம் முழுவதும் அதிகாலை தொழுகையில் தொடங்கி மாலை தொழுகை வரை உண்ணா நோன்பு இருந்து இறைவைனை நினைத்திருப்பார்கள்.நோன்பு என்பது வெறும் உணவை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது மட்டுமல்ல, நீரருந்தாமல், புகைக்காமல், வேறு எந்த தீய பழக்கங்களிலும் ஈடுபடாமல் இருப்பது ஆகும். இது இஸ்லாமின் 5 கடமைகளில் மூன்றாவது கடமையாகும்.

இப்படி ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருந்து அந்த மாதத்தில் வரக்கூடிய அமாவாசையைத் தொடர்ந்து வரும் மூன்றாம் பிறை வரக்கூடிய நாள் புனித ரமலானாக கொண்டாடப்படுகிறது.இது உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் மிக சிறப்பாகக் கொண்டாடப்படக்கூடிய பண்டிகையாகும்.
ரமலான் மாதம் ஏப்ரல் 24ம் தொடங்கி மே 24ம் தேதி வரை உள்ளது. 2020ம் ஆண்டு ரம்ஜான் கொண்டாட்டம் வரும் சனிக்கிழமை அல்லது ஞாயிறு அன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சந்திர பிறை தெரிவதை வைத்து தான் அறிவிக்கப்படும்.இருப்பினும் இந்தியாவைப் பொருத்தவரையில் மே 25ம் தேதி திங்கட்கிழமை தான் கொண்டாடப்பட 99% வாய்ப்புள்ளது.

அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிறை தெரியக் கூடிய ஒரே நாளில் கொண்டாடப்படலாம். அல்லது ஒவ்வொரு பகுதியில் பிறை தெரிவதை வைத்து ரம்ஜான் கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.
பிறை தெரியவில்லையெனில் மேலும் ஒரு நாள் நோன்பு நீட்டிக்கப்படுவது வழக்கம்.

கொண்டாடாம் எப்படி?

ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் கொண்டாட்டத்தில் மசூதியில் அல்லது பெரிய திடலில் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி தொழுகை நடத்தி, மிக கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதோடு அன்றைய தினம் உறவினர்கள் வீட்டிற்கு சென்று ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வது வழக்கமாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகளை உடுத்தி மகிழ்வர்.ரமலான் மாதத்தில் மிக முக்கிய அம்சமே அடுத்தவரின் கஷ்டத்தையும், பசியையும் உணர்வதாகும். அதனால் இந்த தினத்தில் ஏழை எளியோருக்கு உதவி செய்தல், உணவு கொடுத்தல் என்பது மிக உன்னதமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்தாண்டு உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று பயம் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கி இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.இஸ்லாமியர்களின் புனித இடமாக கருதப்படும் மெக்கா கூட மூடப்பட்டுள்ளது.இதன் காரணமாக இந்தாண்டு ரம்ஜாம் சிறப்பு தொழுகை வீட்டிலிருந்தே செய்ய வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர்.

Tags :
× RELATED சகலமும் தரும் லலிதா சகஸ்ரநாமம்