மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதி ராத்திரியையே நாம் மகா சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். இந்த நன்னாளில் சிவனை வேண்டி விரதம் இருப்பதால் எம பயம் நீங்குதல், தீர்த்த நோயில் இருந்து விடுபடுதல் போன்ற பல அறிய பலன்களை பெறலாம். மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள். காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு வீட்டில் பூஜை செய்திட்டு அருகில் உள்ள சிவன் கோயிலிற்கு சென்று, “எம்பெருமானே நான் இன்று மகா சிவராத்திரி விரதம் இருக்க போகிறேன். என்னுடைய விரதத்தில் எந்த தடங்கலும் நேராமல் நான் இந்த விரதத்தை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு விரதத்தை தொடங்கலாம்.