சிவராத்திரி வழிபாடு

சிவபெருமானுக்கு  தீர்த்தவாரி செய்ய வேண்டும். (நீராட்டல்). மணம் மிகுந்த மலரை சிவபெருமானின் உச்சி முதல் திருத்தாள் வரை தூவ வேண்டும். தூவும் பொழுது நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும். ஓதிக் கொண்டே வலம் வர வேண்டும். வணக்கம் செலுத்த வேண்டும். சிவாலயங்களைச் சாணமிட்டு அலகிட்டு (துடைப்பத்தால் பெருக்கித் தூய்மை செய்து கோலமிடுதல்) வாழ்த்த வேண்டும்.  நீர், பால், நெய் முதலியவற்றால் சிவபெருமானை அபிஷேகம் செய்ய வேண்டும்.  சிவபெருமானுக்கு நல்ல தூய்மையான ஆடையை அணிவிக்க வேண்டும். எருக்க மலர் மாலைகளைப் பெருமான் தலையில் வட்டமாக அணிவிக்க வேண்டும். ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரத்தை  செய்ய வேண்டும், பெண்கள் ஐந்தங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும். என்று லிங்க புராணம் கூறுகிறது.

ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு வழிபாடு: சிவராத்திரி அன்று மாலையில் பிரதோஷம், மாலைப் பிரதோஷம் முதல் வழிபாடு தொடங்க வேண்டும். சிவராத்திரிக்கு முந்தைய மாலை காலத்தை நடராஜ மூர்த்தியையும் பிரதோஷ நாயகரையும் வழிபட வேண்டும். பிரதோஷ நேரத்தில் இறைவனைத் தரிசித்தது முதல் கோயிலிலேயே இருந்து கொண்டு சிவ சிந்தையுடனே ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையாக பூஜை செய்ய வேண்டும். பிறர் செய்வதைக் காண வேண்டும். சிவாலயங்களில் நடைபெறும் நான்கு ஜாம அபிஷேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருட்களைக் கொடுத்து உதவலாம்.

நான்கு ஜாம வழிபாட்டிற்குரிய திரவியங்கள்

1. இரவின் முதல் காலம்:- ஜாமம்) சோமாஸ்கந்தரை வழிபட வேண்டும். அப்போது பஞ்சகவ்ய அபிஷேகம் சிறந்தது. ரிக்வேதம் ஓத வேண்டும்.

முதல் ஜாமம்

வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ் கந்தர்

அபிஷேகம் - பஞ்சகவ்யம்

அலங்காரம் - வில்வம்

அர்ச்சனை - தாமரை, அலரி

நிவேதனம் - பால் அன்னம், சர்க்கரைப்

பொங்கல்

பழம் - வில்வம்

பட்டு - செம்பட்டு

தோத்திரம் - ரிக்வேதம் , சிவபுராணம்

மணம் - பச்சைக் கற்பூரம்,  சந்தனம்

புகை - சாம்பிராணி, சந்தனக்கட்டை

ஒளி- புஷ்பதீபம்

2. இரண்டாம் காலம்:- தென் முகக் கடவுளாகிய தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். சிவலிங்கத்திற்கு தேன், சர்க்கரை, தயிர், பால், நெய் கலந்த பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வது மிகச் சிறந்தது. யஜுர் வேதம் ஓத வேண்டும்.

 

இரண்டாம் ஜாமம்

 

வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்

முகக் கடவுள்

அபிஷேகம் - பஞ்சாமிர்தம்

அலங்காரம் - குருந்தை

அர்ச்சனை - துளசி

நிவேதனம் - பாயசம், சர்க்கரைப் பொங்கல்

பழம் - பலா

பட்டு - மஞ்சள் பட்டு

தோத்திரம் - யஜுர் வேதம் , கீர்த்தித்

திருவகவல்

மணம் - அகில், சந்தனம்

புகை - சாம்பிராணி, குங்குமம்

ஒளி- நட்சத்திரதீபம்

3. மூன்றாம் காலம் :- லிங்கோற்பவரை வழிபடுவது சிறப்பு. திருவண்ணாமலையில் இந்த மூன்றாம் காலத்தில் தான் (ஜாமத்தில்) லிங்கோற்பவ உற்பத்தி ஆயிற்று என்று புராணம் சொல்லுகிறது.

 

மூன்றாம் ஜாமம்

 

வழிபட வேண்டிய மூர்த்தம் - லிங்கோற்பவர்

அபிஷேகம் - தேன், பாலோதகம்

அலங்காரம் - கிளுவை, விளா

அர்ச்சனை - மூன்று இதழ் வில்வம்,

ஜாதி மலர்

நிவேதனம் - எள்அன்னம்

பழம் - மாதுளம்

பட்டு - வெண் பட்டு

தோத்திரம் - சாம வேதம், திருவண்டப்பகுதி

மணம் - கஸ்தூரி சேர்ந்த சந்தனம்

புகை - மேகம், கருங் குங்கிலியம்

ஒளி- ஐந்துமுக தீபம்

4. நான்காம் காலம் :- சிவராத்திரி நான்காம் காலத்தில் கருப்பஞ்சாறு அபிஷேகம் செய்வது சிறப்பு. கஸ்தூரி மேல் பூச்சாக பூசலாம். பச்சை ஆடை அணிவிக்கலாம். திருநாவுக்கரசர் பாடலைப்பாடலாம். அதர்வண வேதம் ஓதுதல் சிறந்தது. இவ்வாறு பூஜை செய்ய முடியாதவர்கள் பிறர் செய்வதைக் கண்டு கேட்டுத் தரிசிக்கலாம்.

 

நான்காம் ஜாமம்

வழிபட வேண்டிய மூர்த்தம் - சந்திரசேகரர்(இடபாரூடர்)

அபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனை நீர்

அலங்காரம் - கரு நொச்சி

அர்ச்சனை - நந்தியாவட்டை

நிவேதனம் - வெறும் சாதம்

பழம் - நானாவித பழங்கள்

பட்டு - நீலப் பட்டு

தோத்திரம் - அதர்வண வேதம் , போற்றித்

திருவகவல்

மணம் - புனுகு சேர்ந்த சந்தனம்

புகை - கர்ப்பூரம், லவங்கம்

ஒளி- மூன்று முக தீபம்

ஆகமங்கள் சொல்லும் மாத சிவராத்திரி மாத சிவராத்திரி விரதங்களைப் பற்றி மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்லுகிறது. அதனைச் சுருக்கி இங்கே தரப்படுகிறது.

1. சித்திரை மாதம் :- இம்மாதம் தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி உமா தேவியால் வழிபடப்பட்டது.

2. வைகாசி மாதம் :- வளர்பிறை. அஷ்டமி சிவராத்திரி சூரிய பகவனால் வழிபடப்பட்டது.

3. ஆனி மாதம் :- வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி ஈசனால் வழிபடப்பட்டது.

4. ஆடி மாதம் :- தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகனால் வழிபடப்பட்டது.

5. ஆவணி மாதம் :- வளர்பிறை-அஷ்டமி சிவராத்திரி சந்திரனால் வழிபடப்பட்டது.

6. புரட்டாசி மாதம் :- வளர்பிறை திரியோதசி சிவராத்திரி ஆதி சேஷனால் வழிபடப்பட்டது.

7. ஐப்பசி மாதம் :- வளர்பிறை-துவாதசி சிவராத்திரி இந்திரனால் வழிபடப்பட்டது.

8. கார்த்திகை மாதம் :- 2 சிவராத்திரி வளர்பிறை சப்தமியும் தேய்பிறை அஷ்டமியும் சிவராத்திரிகள் இவற்றை சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.

9. மார்கழி மாதம் :- வளர்பிறை, தேய்பிறையில் வரும் சிவராத்திரி லட்சுமியால் வழிபடப்பட்டது.

10. தை மாதம் :- வளர்பிறை-நந்தி தேவரால் வழிபடப்பட்டது.

11. மாசி மாதம் :- தேய்பிறை-தேவர்களால் வழிபடப்பட்டது.

12. பங்குனி மாதம் :- வளர்பிறை-குபேரனால் வழிபடப்பட்டது.

சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.

நித்திய சிவராத்திரி

மாத சிவராத்திரி

பட்ச சிவராத்திரி

யோக சிவராத்திரி

மகா சிவராத்திரி

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர். விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

 

இவ்விரதம் பற்றிய ஐதீகங்கள்

இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் “சிவராத்திரி” என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று பிராத்தித்தார் இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார்.

விரத காலங்களில் ஓதக் கூடிய தேவாரங்கள்

திருக்கேதீச்சரப் பதிகங்கள்

திருவண்ணாமலைப் பதிகங்கள்

பலன் தரும் பரிகாரங்கள்

மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது.அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும்.காரிய வெற்றியும் ஏற்படும்.’சிவாய நம’ என்று சிந்தித்திருந்தால் ‘அபாயம்’ நமக்கு ஏற்படாது,’உபாயம்’ நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும்.பொருளாதார நிலையும் உயரும். ஒரு நாள் முழுவதும்,ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிபட்டு சிவாலயங்களில் சிவன் சந்நதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும். அதனால் தான் “சிவராத்திரி” விரதம் சிறந்த

பலனைக் கொடுக்கிறது.

Related Stories: