ஆதிசங்கர பகவத்பாதர் அறுவகைச் சமயங்களை ஒன்றாக்கி நிலைபெறச் செய்ய முயன்றபோது, அபநவ குப்தன் என்பவர் அவர் மீது சூன்ய மந்திரங்களை ஏவி அவருக்குக் காசநோயை உண்டு பண்ணினான். அதனால் வருந்தி இருக்கும் வேளையில் அவருடைய கனவில் முருகன் தோன்றித் திருச்செந்தூருக்கு வரும்படி ஆணையிட்டார். அதன்படியே, அவர் முருகனைத் தரிசித்துப் பற்றிநிற்கும் நோயினின்று குணம் பெற எண்ணித் திருச்செந்தூரினை அடைந்தார். அவர் கோயிலுக்குள் சென்றபோது திருச்செந்தூர் முருகனை ஆதிசேஷன் வழிபட்டுத் திரும்பிக் கொண்டிருந்தான். அவர், அவன் வந்ததை நல்ல சகுனமாகவும், அவன் சரசர வென்று செல்லும் ஒலியைச் சந்தமாகவும் ஏற்றுக்கொண்டு முருகன்மீது , ‘‘சுப்பிரமணிய புஜங்கம்’’ எனும் நூலைப் பாடினார்.