தேனாய் இனிக்கிறது
திருமலையை நினைத்தால்
திருப்பம் வருகிறதுவிரும்பும் வாழ்வை
திருவேங்கடம் தருகிறது!பணத்தால் கூடும்பயனுள்ள இன்பமதைகுணம் மாறாதேற்ககுன்றென காத்திடுவாய்குறைகள் பொறுத்திடுவாய்!மாசறு மங்கைமணாளன்மல்லிகை சிரிப்பில்மனநோய் பறந்திடும்மைவிழி மான்நோக்கில்மங்கலம் நிறைந்திடும்!திடமன சந்திரக்கலையைதிருமால் தந்திடுவார்கேட்பதை கொடுத்துகோரிக்கை வைத்தால்கோவிந்தன் வந்திடுவான்!மனமூடிய மேகம்விலகமாயனை சரணடைவோம்தனம்கோடி தொழில்வளரதயாளனை போற்றிடுவோம்தயவுடன் கேட்டிடுவோம்!வளைந்து கொடுத்தால்வாழ்வு ஏற்றம்காணும்மலைப்பாதை சொல்கிறதுமலையப்பன் மனம்நெகிழமோட்சசக்தி வீடுசேர்கிறது!தன்னைத்தான் அறிந்தவன்தரணியில் தாழ்வதில்லைஉன்னையும் உணர்ந்தவன்உருமாறி விழ்வதில்லைதிருமலைவாசன் கைவிடுவதில்லை!திருக்கோயில் சிற்றெறும்பாய்திருமாலின் மனக்கரும்பாய்திருவாழ்வு காலம்கழியதிருக்கண் அருள்புரிவாய்திருவாசல் சேவகனாவேன்!போலி வாழ்வில்அறிவை செலுத்திபயனற்று வாழ்ந்தது போதும்மண்ணை பொன்னாக்கும்பணியில் மனதை திருப்பிமாநிலம் பயனுற வாழ்வோம்மாதவ னருள் துணையாகும்!
விஷ்ணுதாசன்