அசுவினி: அரசு வழி அனுகூலம் பெறலாம். அரசுத் துறையினர் முன்னேற்றம் கூடும். காதல் வாய்ப்பு பிரச்சனை தரும். பாம்பன் சுவாமிகளை வழிபடவும்.
பரணி: புதிய வண்டி, வாகன யோகம் கூடும் நேரமிது. தூர தேச தகவல்கள் சாதகமாகும். வழக்குகள் தாமதமாகும். துர்கை அம்மனை வழிபடவும்.
கார்த்திகை: இடமாற்றம், பதவி மாற்றம் எதிர்பார்க்கலாம். ஆன்மீக பணியில் நாட்டம் கூடும். அனுமனை வழிபடவும். ரோகிணி: உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் ஏற்க வேண்டாம். நட்பு வலை விரியும். காளியம்மனை வழிபடவும்.மிருகசீரிஷம்: மனதில் கவலைகள் குறைந்து உற்சாகம் கூடும் மாதமிது. அரசியல் அனுபவம் கூடும். பண வரவு மகிழ்ச்சி தரும். குருவை வழிபடவும்.திருவாதிரை: தெய்வ அனுகூலம் கூடும் நேரமிது. சொல்வாக்கும் செல்வாக்கும் கூடும். மதுரை மடப்புரம் விலக்கு தெற்குமுக விசாலாட்சி விநாயகரை 108 முறை வலம் வரவும்.புணர்பூசம்: மனக் குழப்பம் கூடும் நேரமிது. எதிலும் கவனம் தேைவ. சுபச் செலவுகள் கூடும். யோக நரசிம்மரை வழிபடவும்.பூசம்: குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் மாதமிது. கடன் சுமை குறையும். அரசு வழி அனுகூலம் பெறலாம். பெருமாளை வழிபடவும்.ஆயில்யம்: அலுவலகப் பணியில் அலைச்சல் கூடும். குடும்ப உறவுகள் சீராகும். மன நிம்மதி கூடும். மதுரை மடப்புரம் விலக்கு தெற்குமுக விசாலாட்சி விநாயகரை 108 முறை வலம் வரவும்.மகம்: மறைமுக எதிர்ப்புகள் மறையும் மாதமிது. நல்ல தகவல்கள் தனவரவு கூட்டும். பெண்களால் யோகம் கூடும். சிவசக்தியை வழிபடவும்.பூரம்: புதிய தொழில் வாய்ப்புகள் அமையும் மாதமிது. பழைய கடன் சுமை குறையும். அரசியல் அனுபவம் கூடும். திருச்செந்தூர் முருகனை மனதார வழிபடவும்.உத்திரம்: தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். குடும்ப உறவுகள் சீராகும். மேற்கில் லாபம் கூடும். பாம்பன் சுவாமிகளை வழிபடவும்.அஸ்தம்: உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். கடன் சுமை குறையும். தெற்கில் லாபம். அலுவலகப் பணி சிறக்கும். சுவாமி அய்யப்பனை வழிபடவும்.சித்திரை: பயணங்கள் பயன் கூட்டும் நேரமிது. பணத்தேவை அதிகரிக்கும். திருமணத்தடை நீங்கும். திசைமாறிய குருவை வழிபடவும்.சுவாதி: தொழில் மற்றும் வியாபார முன்னேற்றம் சீராகும். அலுவலகப் பணியில் குழப்பம் கூடும். கிழக்கில் லாபம். அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடவும். விசாகம்: வண்டி, வாகனங்களில் கூடுதல் கவனமுடன் செயல்படவும். காதல் வாய்ப்புகள் சுகம் கூட்டும். பலவழிகளில் பணவரவு கூடும். மகாலட்சுமியை வழிபடவும்.அனுஷம்: பேச்சிலும், செயலிலும் கூடுதல் நிதானம் தேவை. செயல்கள் மனநிறைவு கூட்டும். குருவை வழிபடவும்.கேட்டை: எதிர்பாராத சந்திப்புகள் இன்பம் தரும். கடல் சார்ந்த பொருட்களால் லாபம் வரலாம். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் கூடும். முருகனை சிகப்பு மலர் கொண்டு வழிபடவும்.மூலம்: வியாபார லாபம் வெற்றி தரும் நேரமிது. தொழில் மாற்றம், பதவி மாற்றம் எதிர்பார்க்கலாம். ஜீவசமாதிகளை வழிபடவும்.பூராடம்: குடும்ப உறவுகள் சீராகும் நேரமிது. புதிய தொழில் முயற்சிகள் தாமதமாகும். வழக்குகள் சாதகமாகும். காலையில் கதிரவனை வழிபடவும்.உத்திராடம்: எதையும் யோசித்துச் செயல்பட வேண்டிய நேரமிது. அவசரம் குறைக்கவும். உடல் நலன் சீராகும். மாலையில் வனதுர்க்கையை வழிபடவும்.திருவோணம்: தொழில் முன்னேற்றம் கூடும் நேரமிது. வடகிழக்கில் லாபம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். ராகு காலத்தில் காலபைரவரை வழிபடவும்.அவிட்டம்: பொருளாதார முன்னேற்றம் கூடும் நேரமிது. புதிய தொழில் அனுபவம் பெறலாம். மின்சாரம், நெருப்பில் கவனம் தேவை. மதுரை மடப்புரம் விலக்கு தெற்குமுக விசாலாட்சி விநாயகரை வழிபடவும்.சதயம்: புதிய ஆடை, அணிகலன் வாங்கலாம். தொழில் போட்டி கூடலாம். பெற்றோர் உடல்நலம் பேணவும். பரமசிவனை வழிபடவும்.பூரட்டாதி: புதிய சொத்துகள் வாங்கும் நேரமிது. அலுவலகப்பணியில் அனுபவம் கூடும். கடன் தொல்லை குறையும். காமாட்சி அம்மனை வழிபடவும்.உத்திரட்டாதி: தாய்வழி உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும் மாதமிது. மறைமுக எதிர்ப்புகள் குறையும். குலதெய்வ வழிபாடு செய்து வரவும்.ரேவதி: செல்போன் பேச்சுகளால் சிக்கல் உண்டாகலாம். யாருக்கும் ஜாமீன் ஏற்க வேண்டாம். குருவை வழிபடவும். மடப்புரம் விலக்கு - திருப்புவனம் ஜோதிடர்கரு.கருப்பையா, M.A.M.Phil.,B.Ed.,போன்: 94431-65504youtube: jothidar karukaruppiah