பலகோடி யுகங்கள் கண்டு
பற்பல உயிரினம் படைத்து
பலவண்ண நிறங்கள் கோர்த்துபசுமை நிரந்தர ஆடையாக
பகல் விளக்கு வீரசூரியனாய்அகல் விளக்கு முழுநிலவாய்அண்டம் பேரண்டம் கட்டிஆளும் அன்னை மகாசக்தி! அறிவாகி, அறிவெனும் சுடராகிஉயிராகி உயிரின் விதியாகிசத்தியமாகி, சத்திய விளக்கமாகிபுத்தியாகி புத்தியெனும் உணர்வாகிகல்வியாகி கல்வியின் பயனாகிகவிதையாகி அதன் பெருமையாகிஞானமாகி ஆழ்ந்த பொருளாகிகலைகள் வளர்க்கும் கலைவாணி! கலையால் உலகம் இயங்கும்கலையால் இதயம் உயிர்க்கும்கலையால் கவலைகள் தீரும்கலைகள் திரவியம் சேர்க்கும்பொன்மாளிகை கலைநயம் கண்டுபொன்மகளின் பொற்கிழி உண்டு!தீதில்லா செல்வம் குவித்துதிறமைகள் வளர்த்து வாழ்வோம்! காவியம் படைக்கும் அறிவும்கடைத்தெரு தூய்மை பணியும் கலையேபாரபட்சமின்றி நினதருள்அள்ளி வழங்கிடு திருவே!பாறை கல்வி அதன்ஊற்று செல்வம் - அதுஉருண்டோடி கடல் சங்கமித்தல் சக்தியெனும் தத்துவம்! அணையா அன்புச்சுடர் அன்னையாய்அறிவுத்தந்தையாய் - உதவிடும்தமக்கையாய், குருவாய்அணைக்கும் துணையாய்ஆலோசனை மந்திரியாய்நல்வாழ்வு தொழிலாய்கற்பனை கவி தேனாய்அந்திம தீயாய் எனைஆகுதி ஏற்கும் சக்திலீலைஎண்ணி வியந்துருகினேன்!நினதருளால் அறிவு பெற்றதனைநினதடியில் பாமாலை சூட்டிசரணடையும் பாக்கியம் பெற்றேன்!
விஷ்ணுதாசன்