கண்ணா கனியமுதே
கட்டிக்கரும்பே
கண்ணில் வருவாயே!கண்ணுக்கு இமையாய்
காக்கிறேன் - உன்கண்ணில் என்னை பார்க்கிறேன்! குழந்தையை கண்டால்கண்ணனின் காட்சிமனதில் என்றும் உந்தன் ஆட்சி!உன்னால் வாழ்கின்றேன் - உன்சிறப்பை பாடுகின்றேன்!நீ தான் என்றும் என் தெய்வம் - இருகண்ணில் ஆடும் என் செல்வம்! மழலை கேட்டு மனதில் மகிழ்ந்தேன்மடியில் அமர்த்தி உலகை மறந்தேன்!உன் முகம் பார்த்திருப்பேன்நிழலாய் துணை வருவேன்!நீ பாடினால் குயில் கேட்குமேநீ பேசினால் கிளி தோற்குமே! சின்ன விழி கண்ணனைசிறப்பாய் குளிப்பாட்டிசிகைக்கு சாம்பிராணி தூபமிட்டுகண்ணுக்கு மை தீட்டிநுதலில் பொட்டு வைத்துதொட்டிலில் போட்டு தாலாட்டினால்தூங்குவது போல் நடிப்பான்!தொட்டிலை விட்டு நகர்ந்தால்தூக்கச் சொல்லி அழுவான்!சின்னவன் குறும்புகள் ஆயிரம்பாடினால் வளரும் பாசுரம்! பூவிழி கண்ணா! பூவுடல் மன்னாதத்தி தத்தி பேசும் பேச்சினிலேஉள்ளங்கள் பூக்கும் அன்பினிலேதத்தி தத்தி நடக்கும் அழகினிலே!தாளங்கள் சேரும் சுருதியினிலே!தவழ்ந்து வரும் தங்க ரதமேதாய் மடியில் அமர்ந்து ஊர்வலமே!தவத்தால் கிடைத்த வரமே - உன்மழலை இன்பம் தரும் வேதமே! வேணுகானம் கேட்கிறதுவெள்ளி வாசல் திறக்கிறதுகுருவாயூர் குழந்தை சிரிக்கிறதுகார்மேகம் கருணை பொழிகிறது! வாழ்க்கையே விளையாட்டெனில்விளையாட்டே வாழ்க்கை உனக்கு!
- விஷ்ணுதாசன்