ஆவணி மாத நட்சத்திர பலன்கள்

அசுவினி: அரசு வழி அனுகூலம் பெறலாம். காவல் துறையினர் முன்னேற்றம் கூடும். காதல் வாய்ப்பு பிரச்சினை தரும். பாம்பன் சுவாமிகளை வழிபடவும்.

பரணி:  புதிய வண்டி, வாகன யோகம் கூடும் நேரமிது. தூர தேசத் தகவல்கள் சாதகமாகும். வழக்குகள் தாமதமாகும். துர்க்கை அம்மனை வழிபடவும்.

கார்த்திகை: இடமாற்றம் பதவி மாற்றம் எதிர்பார்க்கலாம். ஆன்மீகப் பணியில் நாட்டம் கூடும். அனுமனை வழிபடவும்.

ரோகிணி:  உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் ஏற்க வேண்டாம். நட்பு வலை விரியும். அம்மனை வழிபடவும்.

மிருகசீரிஷம்: மனதில் கவலைகள் குறைந்து உற்சாகம் கூடும். அரசியல் அனுபவம் கூடும். பண வரவு கூடும். குருவை வழிபடவும்.

திருவாதிரை: தெய்வ அனுகூலம் கூடும் நேரமிது. செல்வாக்கு கூடும். மதுரை-மடப்புரம் விலக்கு தெற்கு முக விசாலாட்சி விநாயகரை 108 முறை வலம் வரவும். கிழக்கில் லாபம் கூடும்.

புணர்பூசம்: மனக்குழப்பம் கூடும் நேரமிது. எனவே எதிலும் கவனம் தேவை. சுபச் செலவுகள் கூடும். சிவனை வழிபடவும்.

பூசம்: குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கடன் சுமை குறையும். அரசு வழி அனுகூலம் பெறலாம். பெருமாளை வழிபடவும்.

ஆயில்யம்: அலுவலகப் பணிகளில் அலைச்சல் கூடும். குடும்ப உறவுகள் சீராகும். மன நிம்மதி கூடும். மதுரை-மடப்புரம் விலக்கு தெற்குமுக விசாலாட்சி விநாயகரை 108 முறை வலம் வரவும்.

மகம்: மறைமுக எதிர்ப்புகள் மறையும். தகவல்கள் தன வரவு கூட்டும். பெண்களால் யோகம் உண்டு. சிவசக்தியை வழிபடவும்.

பூரம்: புதிய  தொழில்வாய்ப்புகள் அமையும். கடன் சுமை குறையும். அறிவியல் அனுபவம் கூடும். திருச்செந்தூர் முருகனை வழிபடவும்.

உத்திரம்: தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். உறவுகள் சீராகும். மேற்கில் லாபம் கூடும். பாம்பன் சுவாமிகளை வழிபடவும்.

அஸ்தம்:  உடல் நலத்திற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. கடன் சுமை குறையும். அலுவலகப் பணி சிறக்கும். குருவை வழிபடவும்.

சித்திரை: பயணங்கள் பயன்கூட்டும். பணத் தேவை அதிகரிக்கும். திருமணத் தடை நீங்கும். குருவை வழிபடவும். மேற்கில் லாபம் அமையும்.

சுவாதி: தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். அலுவலகப் பணியில் குழப்பம் கூடும். அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடவும்.

விசாகம்: வண்டி வாகனங்களில் கூடுதல் கவனமுடன் செயல்படவும். காதல் வாய்ப்புகள் சுகம் கூட்டும். பண வரவு கூடும். லட்சுமியை வழிபடவும்.

அனுஷம்: பேச்சிலும், செயலிலும் கூடுதல் நிதானம் தேவை. மனசாட்சி மன நிறைவு கூட்டும். குருவை வழிபடவும். தெற்கில் லாபம் கூடும்.

கேட்டை: எதிர்பாராத சந்திப்புகள் இன்பம் தரும். கடல் சார்ந்த பொருட்களால் லாபம் வரலாம். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் கூடும். முருகனை சிகப்பு மலர் கொண்டு வழிபடவும்.

மூலம்: வியாபார லாபம் வெற்றி தரும் நேரமிது. இடமாற்றம், பதவிமாற்றம் எதிர்பார்க்கலாம். ஜீவசமாதிகளை வழிபடவும்.

பூராடம்: குடும்ப உறவுகள் சீராகும் நேரமிது. புதிய தொழில் முயற்சிகள் தாமதமாகும். வழக்குகள் சாதகமாகும். கதிரவனை வழிபடவும்.

உத்திராடம்: எதையும் யோசித்து செயல்பட வேண்டிய நேரமிது. எதிலும் அவசரம் குறைக்கவும். உடல் நலன் சீராகும். வன துர்க்கையை வழிபடவும்.

திருவோணம்:  தொழில் முன்னேற்றம் கூடும் நேரமிது. கிழக்கில் லாபம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். ராகு காலத்தில் கால பைரவரை வழிபடவும்.

அவிட்டம்: பொருளாதார முன்னேற்றம் கூடும் நேரமிது. புதிய தொழில் அனுபவம் பெறலம். மின்சாரம், நெருப்பில் கவனம் தேவை. மதுரை-மடப்புரம் விலக்கு தெற்கு விசாலாட்சி விநாயகரை வழிபடவும்.

சதயம்: புதிய ஆடை அணிகலன் வாங்கலாம். தொழில் போட்டி கூடலாம். பெற்றோர் உடல் நலன் பேணவும். சிவனை வழிபடவும்.

பூரட்டாதி: புதிய சொத்துகள் வாங்கும் நேரமிது. ஆசிரியர் பணியில் அனுபவம் கூடும். கடன் தொல்லை குறையும். காமாட்சி அம்மனை வழிபடவும்.

உத்திரட்டாதி: தாய்வழி உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். குல தெய்வ வழிபாடு செய்து வரவும்.

ரேவதி: செல்போன் பேச்சுகளால் சிக்கல் உண்டாகலாம். யாருக்கும் ஜாமீன் ஏற்க வேண்டாம். குருைவ வழிபடவும்.

கனவு ரகசியம்: கனவில் கோபுரம் கண்டால் காரிய வெற்றி அடையும்.

திருப்புவனம் - மடப்புரம் விலக்கு ஜோதிடர்

கரு.கருப்பையா, M.A.M.Phil.,B.Ed.,

போன்: 94431-65504

www.karukaruppiah.com

Related Stories: