தேவையான பொருட்கள்
சிவக்க வறுத்தரைத்த அரிசி மாவு -1கப்வறுத்தரைத்த உளுத்தமாவு -3 டீஸ்பூன்
வெல்லத்தூள்—அரை கப். [பாகு வெல்லமாக]பொடியாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் -2 டேபிள்ஸ்பூன்வெள்ளை எள் -அரை டீஸ்பூன்ஏலக்காய்ப் பொடி - சிறிதுநெய்-2 டீஸ்பூன். சீடையைப் போட்டெடுக்க எண்ணெய்
செய்முறை: ஒரு கப் தண்ணீரில் வெல்லத்தைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். தீயை நிதானப் படுத்தி அரிசி மாவைக் கொட்டிக் கிளறி இறக்கவும். ஆறியவுடன் தேங்காய், உளுத்தமாவு,நெய், எள், ஏலப்பொடி சேர்த்துப் பிசையவும். பிசைந்த மாவை கோலிகளாக ஒரே அளவில் உருட்டி சுத்தமான துணியில் பரப்பிப் போடவும். 15,நிமிடங்கள் கழித்து சீடைகளை காயும் எண்ணெயில் சிறிது,சிறிதாகப் போட்டு கரகரப்பாக வேகவிட்டு எடுக்கவும்.