தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 200 கிராம்,
கற்கண்டு - 500 கிராம்,
தேவையானால் பாசிப்பருப்பு - 50 கிராம்,
நெய் - 200 கிராம்,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
பால் - 1/2 லிட்டர்,
முந்திரி - 8-10,
குங்குமப்பூ - சிறிது.
எப்படிச் செய்வது?
பாசிப்பருப்பை லேசாக வறுத்து அரிசியுடன் சேர்த்து சுத்தம் செய்து பால், தண்ணீர் ஊற்றி வேகவிடவும். பாத்திரத்தில் கற்கண்டு, 1/2 கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி கம்பி பதம் வந்ததும் இறக்கவும். அரிசி, பாசிப்பருப்பு வெந்ததும் கற்கண்டு பாகு சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறவும். ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.
பாசிப்பருப்பை லேசாக வறுத்து அரிசியுடன் சேர்த்து சுத்தம் செய்து பால், தண்ணீர் ஊற்றி வேகவிடவும். பாத்திரத்தில் கற்கண்டு, 1/2 கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி கம்பி பதம் வந்ததும் இறக்கவும். அரிசி, பாசிப்பருப்பு வெந்ததும் கற்கண்டு பாகு சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறவும். ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.