கண்சிமிட்டும் வானம் கண்டு
நாணும் நிலம் நலம் பெற
விண்திரண்ட செல்வம் கூட்டிமண்ணுயிர்கள் வளம் பெற
மாயை புகுந்த மனமெல்லாம்மாற்றம் பெற்று ஒளிபெறமனித இனம் அறநெறியில்மாண்பு கொண்டு நடந்திடமஞ்சள் நிற பொன்னுருக்கிசமுதாய கோயில் புனைந்திடசாதிமத மனப்பிணி நீங்கிசமத்துவம் உறுதிபட நிலைத்திடகூறுபோட்டு மக்களை பிரிக்கும்குள்ளநரி கூட்டம் நடுங்கிடசோறுபோடும் நிலத்தாயின்சோர்வு, தாகம் தீர்ந்திடசுயநலப் பதர் விலக்கிசொர்க்கம் மண்ணில் வசப்படசிந்தையில் உருவேற்றி தமிழ்சொல் மெருகேற்றி அழைக்கிறோம்தூண்பிளந்து வந்திடு சிங்கமுகனேசினம் தணிந்து காத்திடு நரசிம்மனே!பக்தி உள்ள இதயத்தில்புதுமை தினம் மலர்ந்திடசக்தி உள்ள தெய்வமுனைசந்ததிகள் தொடர்ந்து வணங்கிடவிரிந்த பசும் நிலப்பரப்பின்விளக்கமாய் உனை உணர்ந்திடவிசால பார்வை கொண்டுவிரியுலகம் யாவும் அளந்திடநீர் மேல் நடந்து சென்றுநெருப்பில் குளித்தெழுந்துநிலத்தில் மிதந்து வானில் பறந்திடநினைக்கும்போது சிலையாகிநினைவு வந்தால் செயலாகிநின்று பேசும் மொழியாகிநிலைத்து நிற்கும் சொல்லாகிநித்தம் ஆனந்தத்தில் திளைத்திடநரசிம்ம அவதார நோக்கமதைபுகழும் பக்தி தொழிலாகிடநானிலத்தில் செல்வமெலாம்நத்தி வந்து குவிந்திடசிந்தையில் குளிரும் சிங்கபெருமாளேஆகாயம், பூமியில் வற்றாத இனிய நீர் சுரந்திடஅருட்பிரவாகம் பொங்க வருவாயே!
விஷ்ணுதாசன்