திருவையாறு: திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் ஐயாறப்பர், அறம்வளர்த்த நயாகிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடந்தது. திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் கடந்த 10ம் தேதி துவங்கியது. கடந்த 14ம் தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நடந்தது. 6 ஊர்களிலிருந்து சுவாமிகள் கோயிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடந்தது. இதைதொடர்ந்து கோயில் தேரோட்டம் நடந்தது. நேற்று முன்தினம் சப்தஸ்தான பெருவிழாவையொட்டி ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு சென்றனர்.