ஆரணி: ஆரணி அடுத்த அப்பந்தாங்கல் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஆரணி அடுத்த அப்பந்தாங்கல் கிராமத்தில் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் சீரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைப்பெற்று வந்தது. அதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, கணபதி ஹோமம், விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம், லட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், கோபூஜை, யாகசாலை பூஜை உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டது.