திருச்செந்தூர்: திருச்செந்தூர் வீரகாளிஅம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து காலை 8 மணிக்கு கும்ப பூஜை துவங்கியது. காலை 10 மணிக்கு யாகசாலையில் மகா பூர்ணாஹுதியை தொடர்ந்து விமான கலசத்திற்கு புனிதநீரினால் அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடந்தது. பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கமிட்டி தலைவர் நாதன், செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் சங்கரநாராயணன் மற்றும் நிர்வாகக்குழுவினர், இளைஞரணியினர் செய்திருந்தனர்.