பொன்மலை செல்வ முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்

ஏர்போர்ட்: திருச்சி பொன்மலையில் ரயில்வே குடியிருப்பு பகுதியான ‘சி’ டைப் பகுதியில் அமைந்திருக்கும் செல்வ முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்ட திருவிழா நேற்று நடைபெற்றது. இத்திருவிழாவானது கடந்த 12ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் கோயிலில் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், தினமும் திருவீதி உலாவும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா நேற்று காலை நடைபெற்றது. திருத்தேரில் அம்பாள் எழுந்தருளி காட்சி அளித்தார். திருத்தேரானது அங்குள்ள முக்கிய வீதிகளில் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். பொன்மலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: