சீர்காழி: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. காசிக்கு இணையான ஆறு கோயில்களில் முதன்மையானதாகும். மேலும் மருத்துவாசுரன் என்ற அசுரன் நந்திதேவரிடம் சண்டையிட்டுபோது நந்தியபெருமானுக்கு உடம்பில் 9 இடங்களில் குத்துக்காயங்கள் எற்பட்டன. அந்த நந்தி சிவன் சன்னதியின் முன் இந்த கோயிலில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சிறப்புகளை கொண்ட சுவேதாரண்யேஸ்வரருக்கு, சித்திரா பவுர்ணமியை யொட்டி நேற்று முன்தினம் இரவு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.