திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

சீர்காழி: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. காசிக்கு இணையான ஆறு கோயில்களில் முதன்மையானதாகும். மேலும் மருத்துவாசுரன் என்ற அசுரன் நந்திதேவரிடம் சண்டையிட்டுபோது நந்தியபெருமானுக்கு உடம்பில் 9 இடங்களில் குத்துக்காயங்கள் எற்பட்டன. அந்த நந்தி சிவன் சன்னதியின் முன் இந்த கோயிலில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சிறப்புகளை கொண்ட சுவேதாரண்யேஸ்வரருக்கு, சித்திரா பவுர்ணமியை யொட்டி நேற்று முன்தினம் இரவு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

விழாவையொட்டி 1008 சங்குகள் சிவ வடிவத்தில் அலங்கரிக்கபட்டுருந்தது. பின்னர் அந்த சங்குகளிலில் நறுமணம் பொருட்கள் கலந்த புனிதநீர் நிரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் ஊர்வலமாக எடுத்து செல்லபட்டது. பின்னர் சுவேதாரண்யேஸ்வரருக்கு நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யபட்டது. இதனை தொடர்ந்து 1008 சங்குகளில் உள்ள புனிதநீர் சிவனுக்கு அபிஷேகம் செய்யபட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யபட்டு தீபாராதனை காட்டபட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: