கலசபாக்கத்தில் திருமாமுடீஸ்வரர் கோயில் பிரமோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு

கலசபாக்கம்: கலசபாக்கத்தில் உள்ள திருமாமுடீஸ்வரர் கோயில் பிரமோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. கலசபாக்கத்தில் பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி உடனாய திருமாமுடீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 10ம்தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கியது. விழாவையொட்டி சுவாமிக்கு தினமும் அபிஷேகம், ஆராதனை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 16ம் தேதி நடைபெற்றது.

10ம் நாளான கடந்த 19ம் தேதி சந்திரசேகரர் திருவீதி உலா வந்தார். அதைத்தொடர்ந்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதைதொடர்ந்து திருமாமுடீஸ்வரர் ரிஷப வாகனத்தில் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிறைவு நாளையொட்டி கோயில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கோலாகலமாக காட்சியளித்தது.

Related Stories: