அரியலூர்: அரியலூர் அருகே கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. வடம் பிடித்து பக்தர்கள் தேர் இழுத்தனர்.
அரியலூர் அருகே கல்லங்குறிச்சியில் பழமையான கலியுக வரதராஜபெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் தேர் திருவிழா நடந்து வருகிறது. அதேபோல் இந்தாண்டும் கடந்த 13ம் தேதி ராமநவமியன்று கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. கொடியேற்று விழாவன்று சூரிய வாகனம், இரண்டாம் நாள் வெள்ளி பல்லக்கு சிம்ம வாகனம், மூன்றாம் நாள் வெள்ளி பல்லக்கு புன்னைமர வாகனம், நான்காம் நாள் வெள்ளி பல்லக்கு வெள்ளிசேஷ வாகனம், 5ம் நாள் வெள்ளி பல்லக்கு கருட வாகனம் (சதுர்முக படத்தேர்), 6 நாள் வெள்ளி பல்லக்கு யானை வாகனம், 7ம் நாள் திருக்கல்யாணம் படிச்சட்ட கண்ணாடி பல்லக்கு, 8ம் நாள் வெள்ளி பல்லக்கு வெள்ளி குதிரை வாகனம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.