×

பலன் தரும் ஸ்லோகம் : (இடையூறுகள் விலக, கேது கிரக தோஷம் தொலைய ...)

விக்ன கர்த்ரே துர்முகாய விக்ன ஹர்த்ரே ஸிவாத்மனே
ஸுமுகாய ஏகதந்தாய ஸ்ரீ கணேசாய மங்களம்
சதுர்தீஸாய மான்யாய ஸர்வ வித்யாப்ரதாயினே
வக்ரதுண்டாய குப்ஜாய ஸ்ரீ கணேசாய மங்களம்
ஸ்ரீ கிருஷ்ணேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
அருளிய கணேச மங்கள மாலிகா துதி.

பொதுப்பொருள்:

விக்னங்கள் எனப்படும் இடையூறுகளை விலக்கி மங்கலம் செய்பவரே, சிவபுத்திரரே, கணேசா... உமக்கு நமஸ்காரம். மங்களமான முகத்தையுடையவரே, ஒரு தந்தம் கொண்டவரே, உமக்கு நமஸ்காரம். சதுர்த்தி திதிக்கு நாயகனே, யாவராலும் விரும்பி பூஜிக்கத் தக்கவரே நமஸ்காரம். எல்லாவகை கலைகளிலும் தேர்ச்சியருள்பவரே, பக்தர்களுக்கு ஆசியளிக்க வளைந்த துதிக்கையைக் கொண்டவரே, கணேசா உமக்கு நமஸ்காரம்.

(சதுர்த்தி திதியன்று இத்துதியை பாராயணம் செய்தால் இடையூறுகள் விலகும். நின்று போன கட்டிட வேலைகள் பூர்த்தியாகும். விநாயகர் கேது கிரகத்தின் அதிபதி என்பதால் கேது கிரக தோஷங்கள் எல்லாம் தொலையும்.)

Tags :
× RELATED சித்ரா பெளர்ணமி சிறப்புகள்!