கோதண்ட ராமசுவாமி பிரம்ம ரதோற்சவம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வேப்பனஹள்ளி: வேப்பனஹள்ளி அருகே உள்ள பூதிமுட்லு கோதண்டராம சுவாமி கோயிலின்  பிரம்ம ரதோற்சவ விழா நடந்தது.வேப்பனஹள்ளி  அருகே பூதிமுட்லு கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோதண்டராம சுவாமி கோயிலின் பிரம்மேற்சவ விழா, கடந்த 15ம் தேதி  தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.  இதில் கோதண்டராமர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்நிகழ்ச்சியில் வேப்பனஹள்ளி,  சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில்,  விழாவில் முஸ்லிம்களும் பங்கேற்றனர். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: