×

மேலூர் அருகே கம்பூரில் ஆண்டிசுவாமி கோயில் கும்பாபிஷேகம்

மேலூர்: மேலூர் அருகே கம்பூரில் ஆண்டிச்சாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. மதுரை மேலூர் அருகே கம்பூர் கருங்குட்டு பகுதியில் உள்ள கருமலை ஆண்டிசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. இவ்விழாவில் கம்பூர், கருங்காலக்குடி உட்பட அப்பகுதியை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பங்குனி உத்திர விழா இக்கோயிலில் கொண்டாடப்பட உள்ளது. இதில் பால்குடம், காவடி நிகழ்ச்சிகளும், அன்னதானமும் வழங்கப்படும் என கோயில் விழா கமிட்டியினரும், பொது மக்களும் தெரிவித்தனர்.

Tags : Melur ,Coimbatore ,
× RELATED தனுஷுக்கு எதிரான மனு தள்ளுபடி