ஓமலூர்: சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள காமாண்டப்பட்டி கிராமத்தில், பழமையான விநாயகர் கோயில், சின்னகோடலாத்து மாரியம்மன் கோயில்களின் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் கோயில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து கோ பூஜை நடந்தது. விழா நிறைவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.