வாலாஜா ஏகாம்பரநாதர் கோயிலில் பிரமோற்சவ தேரோட்டம்

வாலாஜா: வாலாஜா ஏகாம்பரநாதர் கோயிலில் பிரமோற்சவத்தை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. வாலாஜா காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீஏகாம்பரநாதர் கோயில் பிரமோற்சவம் கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவத்தின் 7ம் நாளான நேற்று விமரிசையாக தேரோட்டம் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரநாதர் தேரில் அமர வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

நேற்று காலை கோயில் அருகே இருந்து புறப்பட்ட தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். செண்டைமேளம், நாதஸ்வரம், கரகாட்டம் மற்றும் வாணவேடிக்கையுடன் தேர்வலம் வந்தது. நிகழ்ச்சியில் திருவலம் சாந்தா சுவாமிகள், சித்தஞ்சி மோகானந்த சுவாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று இரவு தேர் நிலையை வந்தடைந்தது. விழாவை முன்னிட்டு இன்ஸ்பெக்டர் பாலு தலைமையில்  பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டது. மேலும், போக்குவரத்து மாற்றுப்பாதையில் விடப்பட்டது.

Related Stories: