×

கோட்டூர் அருகே மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

மன்னார்குடி: கோட்டூர் அருகே 74 நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர் மற்றும்  மகா மாரியம்மன் ஆகிய  கோயில்களின்  கும்பாபிசேகம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே  74 நல்லூர் கிராமத்தில் அமைந் துள்ள  வரசித்தி விநாயகர் மற்றும்  மகா மாரியம்மன் ஆகிய கோயில்கள்  கும்பாபிசேகத்தை முன்னிட்டு கடந்த 3 தினங்கள் வர சித்தி விநாயகர் மற்றும்  மகா மாரியம்மன் ஆகிய இரு கோயில்களில்  யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டது.

யாக சாலையில் புனித நீர் அடங்கிய கடம் வைத்து ஹோமம் வளர்க்கப் பட்டது. இதில் 81 கலச பூஜை, கஜபூஜை உள் ளிட்ட பல்வேறு விதமான பூஜைகள் செய்து அதன் நிறைவாக பூர்ணா ஹூதி நடைபெற்றது.இந்நிலையில் நேற்று அந்தணர்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கொண்ட கடங்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் விமான கலசங் களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிசேகம் நடைபெற்று, தீபஆராதனை செய்யப்  பட்டது தொடர்ந்து கோயிலில் விசேச தீபாராதனை செய்யப் பட் டது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. இரவு வானவேடிக் கை முழங்க சுவாமி வீதியுலா நடைபெற்றது.

Tags : Maha Mariamman Temple ,devotees ,Kothoor Kumbabhishekam ,
× RELATED குன்னம் அருகே மகா மாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம்