தேவையான பொருள்கள்:
கடலை மாவு - 3 கப்அரிசி மாவு - 1 கப்
மிளகாய் தூள் - 5 தேக் கரண்டி (அ) தேவையான அளவுஉப்பு - தேவைக்கேற்பசோடாமாவு - சிட்டிகை அளவுஎண்ணெய் - பொரித்தெடுக்கமுறுக்குக் குழாய், ரிப்பன் அச்சு.
செய்முறை:கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள்,சோடாமாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சலித்து வைத்துக்கொள்ளவும். தேவையான அளவு நீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும். காய்ந்த எண்ணெய் ஊற்றி மேலும் இலகுவாக பிசையவும். கடினமாக இல்லாமல் பிழிவதற்கு ஏற்றவாரு இலகுவாக இருக்க வேண்டும் அதேசமையம் பிசுபிசுப்பின்றி இருக்கவேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ரிப்பன் அச்சு கொண்டு எண்ணெயில் பிழிந்து பொரிக்கவும். மொறு மொறுப்பான ஓலைப்பக்கோடா தயார்.