குளித்தலை வையாபுரி நகர் முத்து விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை வையாபுரி நகரில் உள்ள முத்து விநாயகர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா  நடைபெற்றது. விழாவினையொட்டி முதல் நாள் காவிரியில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு விநாயகர் வழிபாடு, வாஸ்து பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் முதல் கால யாக வேள்வி நடைபெற்றது. இரண்டாம் நாள் இரண்டாம் கால யாக பூஜை புண்யாகம், யாத்ரா தானம், சங்கல்பம் நடைபெற்றது. கோபுர விமான கலசங்களுக்கும் மூலாலய தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: