அருள் பெருக்கும் ஆசீர்வாத பாபா

திருநின்றவூரை அடுத்த வேப்பம்பட்டு முல்லை நகரில் உள்ள ஆசீர்வாத பாபா கோயிலில் கடந்த 6.02.2011ல் பூமி பூஜை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக பிரதி வியாழக்கிழமைதோறும் இங்கு கூட்டு பிரார்த்தனையும், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் பக்தர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. பாபாவுக்கு சிறப்பு ஹோம பூஜை 108, 158, 208, 258, 308, 358 இந்த வாரங்களில் நடைபெற்றது. 21.2.2019 இன்று வியாழக்கிழமை 408வது சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தன்வந்திரி ஹோமம் தத்தாத்திரேயர் ஹோமம், சாய்சுதர்சன ஹோமம் ஆகியவை நடைபெற உள்ளது. அன்னதானத்திற்கும் ஹோமத்திற்கும் உதவி செய்யும் பக்தர்களுக்கு பிரசாதம், பாபா உருவம் பொறித்த வெள்ளி டாலர் வழங்கப்படும்.

இந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுதுபவர்கள் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறவும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும். 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசுத்தேர்வுக்கு உரிய உபகரணங்களை நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம். ஆசீர்வாத பாபா எண்ணற்ற பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறார். பாபாவை வழிபட வரும் பக்தர்களின் வசதிகளுக்காக கோயில் கட்டிடப்பணி முடியும் தருவாயில் உள்ளது. திருப்பணிக்கு பக்தர்கள் பொருள், பணம் மற்றும் காசோலையாகத் தந்து உதவி செய்யலாம். இந்த 408வது வார ஹோம பூஜையில் சாமி பக்தர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பாபாவின் அருளை பெற வேண்டுமாய் ஷீரடி ஆசீர்வாத பாபா மந்திர் சாரிட்டபுல் டிரஸ்ட் ஸ்தாபகர் ரவிந்திரநாத் தாகூர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் விபரங்களுக்கு: 7358431876 மற்றும் aaseervathbaba.tn@gmail.com தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: