திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு, 50 கிலோ தயிர் சாதம் தயாரிக்கப்பட்டு அன்னக்கொடை உற்சவம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், மாசி மகத்தை முன்னிட்டு நேற்று அன்னக்கொடை உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி, நேற்று காலை ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜை, திருமஞ்சன நிகழ்ச்சி, தீபாராதனை நடைபெற்றது. பகல் 2 மணி அளவில் அன்னக்கொடை உற்சவம் தொடங்கியது.