பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள சு.ஆடுதுறை குற்றம் பொறுத்தீஸ்வரர் கோயிலில் மாசிமகத் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரினை இழுத்தனர். பெரம்பலூர் மாவட்டத்தின் வடக்கு எல்லையான வெள்ளாற்றின் கரையில் அமைந்துள்ள திருவாலந்துறை, திருமாந்துறை, திருவட்டத்துறை என 7 துறைகள் உள்ளது. இதில் 3வது துறை யாக விளங்குகிற சு.ஆடுதுறை கிராமத்தில்தான் ஸ்ரீ குற்றம் பொறுத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் மாசி மகம் நட்சத்திர நாளில், மாசி மகம் திருவிழா சிறப்பாக நடைபெறும். நடப்பா ண்டிற்குக் கடந்த 10ம் தேதி கொடியேற்ற த்துடன் தொடங்கிய விழாவின், 9ம் நாளான நேற்று முக்கிய நிகழ்வானதேரோட்டம் நடைபெற்றது.