திருச்சி: திருச்சி நந்திகோயில்தெரு நாகநாதசுவாமி கோயில் மாசிதிருவிழா கடந்த 9ம் தேதி துவங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. ஆனந்தவள்ளி உடனுறை நாகநாதசுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவெறும்பூர் அருகே சர்க்கார்பாளையத்தில் காசி விசாலாட்சி அம்மாள் உடனுறை காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது.