காரைக்கால்: காரைக்கால் திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோயில் பிரமோற்சவ விழாவையொட்டி தேர்த்திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. காரைக்கால் திருமலைராயன்பட்டினம் மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ விழா, கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் நிகழ்ச்சியில் தினமும் பல்வேறு அலங்காரம் மற்றும் வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக மின்சார சப்பரப்படலில் சுவாமி ரிஷப வாகனத்தில் வீற்றிருந்தவாறு வீதியுலா புறப்பாடு கடந்த 16ம் தேதி இரவு நடைபெற்றது.