வைகுண்டவாச பெருமாள் கோயிலில் ரதசப்தமி விழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற ஜனகவல்லி சமேத வைகுண்டவாச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ரதசப்தமி மகோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ரதசப்தமி விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு வைகுண்டவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சூரிய பிரபை வாகனத்திலும், 9 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், 10.30 மணிக்கு சேஷ வாகனத்திலும், மதியம் 12.30 மணிக்கு கருட வாகனத்திலும், மாலை 4 மணிக்கு இந்திர விமான வாகனத்திலும், 5.30 மணிக்கு கற்பக விருட்சம் வாகனத்திலும், இரவு 7 மணிக்கு சந்திர பிரபை வாகனத்திலும் எழுந்தருளி கோயிலை சுற்றி வலம் வந்தார். தொடர்ந்து வைண்டவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: