வெள்ளிவானில் கூட்டமாக
ஊர்வலம் நடத்தும் கார்த்திகை மேகமே!
பள்ளிக்கட்டுடன் சபரிமலை பயணமே!பம்பை கரையில் பக்தர்கள் கூட்டம்!
பக்தி பிரவாகத்தில் ஐயப்பன் அருள்தோட்டம்!பக்தியுள்ள மனதில் ஞானமுடன் முக்தி வந்து சேரும்!பந்தளராஜன் பார்வை நேரில் வந்தருளும்!காயப்பட எறிவார்கல் பூவெனமாறும்!கோபத்தில் விட்டசொல் குறிதவறிப்போகும்!துன்பம்கோடிவந்தாலும் துவண்டோடிவிடும்!முற்பிறவி பாவம் மூண்டெழும்போதுபக்திலயம் கைகொடுத்து காக்கும்!இப்பிறவி பயன் எல்லாம்இனிது நிறைவேறும்-வற்றாதஇன்பம் கேணியாய் ஊறும்!பக்தியுள்ளோர் வாய்மொழிதத்துவங்களாகும்!படிப்படியாய் தாள்திறந்துபரமனடி காட்டும்!சிந்தை, சொல் தெளிவாகிதேனங்கே சுரக்கும்!தன்னலம் இறந்துபோகபிறர்நலம் பிறக்கும்!உலகமே நாடக மேடையென்னும்உண்மை விளங்கும்!அகமும், புறமும் அர்த்தமுள்ளவாழ்க்கை மலரும்!அன்பு, அறம், அமைதிஜீவநதியாக மேலெழுந்து பொங்கும்!தெய்வம் கோவில்கட்டிநிரந்தரமாய் தங்கும்!கண்கள் பூக்க! கால்கள் கடுக்கஉடல் வேர்க்க! கரடு, முரடு பாதைகடந்து செல்லும் பயணம்!பதினெட்டு படி தொட்டுசந்நிதானம் சேர்ந்ததும்சாஸ்தாவின் அருளால்புதுப்பிறவி ஜனனம்!ஒன்பது வாய் கூட்டுக்குள்சுற்றிவரும் காற்று!ஐம்புலன் அடக்கியுன்ஆயுள்விதி மாற்று!நாடிசத்தம் நின்று போனால்நாலுபேர் துணை வேண்டுமிதைநன்குணர்ந்து கொண்டுபதினெட்டு படியேறி வணங்கு!
விஷ்ணுதாசன்