தர்மபுரி: மார்கழி மாதம் பிறந்ததையொட்டி அதிகாலையிலேயே ஏராளமானோர் திருப்பாவை, திருவெம்பாவை பாடி ஊர்வலமாக சென்றனர். தமிழ் வருடத்தின் 9வது மாதமான மார்கழியில், அதிகாலையில் எழுந்து நீராடி வண்ணக் கோலம் இட்டு இறைவழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. கோயில்களுக்கு செல்வோர் திருப்பாவை, திருவெம்பாவை படிப்பது வழக்கம். நேற்று மார்கழி மாதம் பிறந்ததையொட்டி, பெண்கள் அதிகாலையிலேயே நீராடி புத்தாடை அணிந்து வாசலில் வண்ணக் கோலமிட்டு மங்கலப் பொருட்களை வைத்து வழிபட்டனர்.